search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில்
    X

    500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில்

    • சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    • கோவில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, குதிரை வாகனம் இருக்கின்றன.

    சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இந்த பச்சைவாழி அம்மன் கோவில் இருக்கிறது இக்கோவிலின் பிரதான தெய்வமான அம்மன் பச்சைவாழியம்மன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். தல புராணங்களின்படி பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், அதில் வசித்த மக்களையும் காப்பதற்கு அம்மன் ஒரு பச்சை பச்சை மரத்தில் குடி அமர்ந்தாள். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவர் கனவில் வந்து அம்மன் உரைக்க, விடிந்ததும் அப்பெரியவர் ஊர் மக்களிடம் இந்த கனவை பற்றி கூறிய போது அனைவரும் மெய்சிலிர்த்தனர். பிறகு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பச்சைவாழி அம்மனுக்கு இங்கு கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

    பழமையான இக்கோவில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, கொடிமரம் மற்றும் குதிரை வாகனம் இருக்கின்றன. கடலூர், பண்ருட்டி, எழுமேடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் சுப காரியத்திற்கு முன்பாக இக்கோவிலுக்கு வந்து அம்மனிடம் உத்தரவைக் கேட்டு அக்காரியத்தை மேற்கொள்கின்றனர். அம்மன் விக்கிரத்தின் தோளின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து, செய்யப்போகும் காரியம் குறித்து மனதில் வேண்டிக்கொள்வார்கள். பழம் கீழே விழுந்தால் அக்காரியம் வெற்றி பெரும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.

    பச்சைவாழியம்மன் காவல் தெய்வமாக இருப்பதால் அம்மனுக்கு பூஜை செய்யும்போது, அந்த தெய்வத்திற்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆடி மாதங்களில் வரும் ஆடி வெள்ளி ஆடி அமாவாசை தினங்கள் அம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    கோவில் அமைவிடம்

    அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் எழுமேடு என்கிற ஊரில் அமைந்துள்ளது.

    கோவில் நடை திறப்பு

    காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    கோவில் முகவரி

    அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில்

    எழுமேடு

    கடலூர் மாவட்டம் – 607104

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×