search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    பேருண்டா நித்யா தேவி
    X
    பேருண்டா நித்யா தேவி

    விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீள உதவும் மந்திரம்

    பேருண்டா நித்யா தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயபக்தியுடன் வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.
    அனைத்து அண்டங்களிலும் நிறைந்து அகில ஆதிகாரணியாக இருப்பதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி பிரமாண்ட ஜனனீ’ என்ற திருநாமம் உண்டு. தங்கம் போன்ற மேனியில் பட்டாடை, குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களை தரித்து, அழகான முக்கண்கள் கொண்டவள். கரங்களில் பக்தர்களின் பாவங்களை அழிக்கும் பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடியை தாமரை மலர் தாங்குகிறது. இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை துவாதசி.

    மந்திரம்:

    ஓம் பேருண்டாயை வித்மஹே

    விஷஹராயை தீமஹி

    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    Next Story
    ×