search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவர்
    X
    பைரவர்

    செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்

    ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். இன்று செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் சொல்லி வழிபாடு செய்யலாம்.
    தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
    மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
    சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
    தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

    வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
    காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
    தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

    முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
    உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
    முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்

    நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
    தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
    வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
    தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
    நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
    காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
    தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

    பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
    கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
    நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
    தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

    சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
    புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
    பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
    தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

    ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
    ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
    தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

    Next Story
    ×