search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வில்வம்
    X
    வில்வம்

    வில்வ இலையை பறிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக நினைத்துக் கொண்டு கீழ்காணும் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
    “நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
    ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
    ஸம்ஸுர விஷவைத்யஸ்ய ஸும்பஸ்ய கருணாநிதே
    அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”

    பொருள்: போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இந்த அர்ச்சனை ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்குமாம்.
    Next Story
    ×