search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கை
    X
    துர்க்கை

    அதிகார பலத்தோடு உயர்ந்த பதவி கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், ஆதிசங்கரர் அருளிய இத்துதியை பாராயணம் செய்து வந்தால் அதிகார பலத்தோடு, உயர்ந்த பதவி கிடைக்கும்.
    த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
    பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
    ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
    ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா.

    பொதுப் பொருள்: சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் மும்மூர்த்திகளுக்கும் உரிய பூஜையாகும். ஏனென்றால் அந்த மும்மூர்த்திகளும் உங்களுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றியவர்களே. இவ்வாறு மும்மூர்த்திகளுக்குமான பூஜைக்குரியவளே, நமஸ்காரம். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.
    Next Story
    ×