என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
X
மார்கழி கடைசி செவ்வாய்... விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுங்க...
Byமாலை மலர்11 Jan 2022 7:55 AM GMT (Updated: 11 Jan 2022 7:55 AM GMT)
மார்கழி கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று துர்கைக்கு விரதம் இருந்து எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம். ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபடுவோம். வளமும் நலமும் தந்தருளுவாள் தேவி.
மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது பூஜைகளுக்கும் வழிபாடுகளுக்கும் உரிய அற்புதமான மாதம். இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். அதேபோல் சிவ வழிபாடு செய்வதும் மகத்துவம் வாய்ந்தது.
சிவ வைணவ வழிபாடுகள் போலவே, மார்கழி மாதத்தில் லக்ஷ்மி வழிபாடு செய்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், விரதம் இருந்து வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது சக்தியின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.
உலகாளும் பராசக்தியின் அம்சமாக, பராசக்தியில் இருந்து வெளிப்பட்டவளாக அருள் மழை பொழிகிறாள் துர்காதேவி. துர்கை என்றால் துக்கத்தையெல்லாம் போக்கி அருளுபவள் என்று அர்த்தம்.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விரதம் இருந்து ராகுகாலவேளையில் துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவது தீயசக்திகளின் தாக்கத்தை துரத்தியடிக்கும் என்றும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில், ஆலயத்துக்குச் செல்வதும் துர்காதேவிக்கு தீபமேற்றுவதும் எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும்.
குறிப்பாக, ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்கி வழிபடுவார்கள் பெண்கள். இதனால், மாங்கல்ய தோஷம் விலகும். மாங்கல்ய பலம் பெருகும். தடைப்பட்ட திருமண யோகமெல்லாம் கைகூடிவரும் என்கிறார்கள் பெண்கள்.
மார்கழி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று நாளில், மறக்காமல் துர்கையை ஆராதிப்போம். எலுமிச்சை தீபமேற்றி வணங்குவோம். நம்மையும் நம் இல்லத்தையும் தழைத்தோங்கச் செய்வாள் துர்காதேவி.
சிவ வைணவ வழிபாடுகள் போலவே, மார்கழி மாதத்தில் லக்ஷ்மி வழிபாடு செய்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், விரதம் இருந்து வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது சக்தியின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.
உலகாளும் பராசக்தியின் அம்சமாக, பராசக்தியில் இருந்து வெளிப்பட்டவளாக அருள் மழை பொழிகிறாள் துர்காதேவி. துர்கை என்றால் துக்கத்தையெல்லாம் போக்கி அருளுபவள் என்று அர்த்தம்.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விரதம் இருந்து ராகுகாலவேளையில் துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவது தீயசக்திகளின் தாக்கத்தை துரத்தியடிக்கும் என்றும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில், ஆலயத்துக்குச் செல்வதும் துர்காதேவிக்கு தீபமேற்றுவதும் எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும்.
குறிப்பாக, ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்கி வழிபடுவார்கள் பெண்கள். இதனால், மாங்கல்ய தோஷம் விலகும். மாங்கல்ய பலம் பெருகும். தடைப்பட்ட திருமண யோகமெல்லாம் கைகூடிவரும் என்கிறார்கள் பெண்கள்.
மார்கழி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று நாளில், மறக்காமல் துர்கையை ஆராதிப்போம். எலுமிச்சை தீபமேற்றி வணங்குவோம். நம்மையும் நம் இல்லத்தையும் தழைத்தோங்கச் செய்வாள் துர்காதேவி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X