என் மலர்
இஸ்லாம்
ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
ஒருமுறை நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘நாயகமே மறுமையில் உங்களின் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், ‘உமக்கு இருக்கும் பேராசையினால் இந்தக்கேள்வியை கேட்கிறீர்கள். உம்மைத்தவிர வேறு யாரும் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்’ என்று கூறினார்கள். பின்னர் தொடர்ந்து என் பரிந்துரையின் மூலம் மறுமையில் நற்பாக்கியம் பெறுபவர்கள் யார் என்றால், எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும், இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவாரோ அவர் தான் என்றார்கள்.
ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
1. தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்து விட்டால், அதன்பிறகு இனிமேல் அந்த பாவத்தை செய்யமாட்டேன் உள்ளத்தால் உறுதி கொள்ள வேண்டும்.
2. பாவத்தை விட்டு நீங்க வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி செய்த பின்னர் அதை மனதால் செயல்படுத்தவும் முன்வர வேண்டும்.
3. இதையும் மீறி பாவம் செய்தால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் மனதில் ஏற்பட வேண்டும்.
4. யார் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இறைவன் கூறிஇருக்கிறான். அதன்படி பாவமன்னிப்பு கேட்கும் எனது பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படும் என்று மனதில் உறுதியாக எண்ணம் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இந்த நான்கும் உள்ளம் சார்ந்தது. இனி உடல் சார்ந்த 4 விஷயங்கள்:
5. ஏதேனும் பாவம் செய்து விட்டால், உடனே இறைவனிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்று மனதில் முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உடலை சுத்தம் செய்து பள்ளிவாசல் வரவேண்டும். அங்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும்.
6. தொழுகை முடிந்த பின்னர் 70 முறை ‘அஸ்தஃபிருல்லாஹ் ரப்பீ மின்குல்லி தன்பின்வ கதீஅதின் வஅதூபு இலைஹி’ என்று கூற வேண்டும். (இதன் பொருள் : ‘ எனது எல்லாப்பாவங்களில் இருந்தும் இறைவனிடம் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். நான் இறைவனின் பக்கமே மீண்டு விட்டேன்’ என்பதாகும்). அடுத்து ‘ சுப்ஹான ரப்பியல் அளீம் வபிஹம் திஹி’ என்று 100 முறை கூற வேண்டும்.
7. தன்னால் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
8. பாவ மன்னிப்பு வேண்டி ஒருநாள் நோன்பு இருக்க வேண்டும்.
ஒருவன் இந்த எட்டு நிலைகளையும் சரியாக கடைப்பிடித்துவிட்டால் அவனது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்து திருக்குர்ஆன் (11:114,115) இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்’.
எனவே இந்த புனிதமிகு ரமலானில் நல்லறங்களை அதிகம் செய்து இறைவனிடம் பாவ மன்னிப்பை பெற்று சுவனபதியில் இடம் பெற நான் அனைவரும் முயற்சி செய்வோம், ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
அதற்கு நபியவர்கள், ‘உமக்கு இருக்கும் பேராசையினால் இந்தக்கேள்வியை கேட்கிறீர்கள். உம்மைத்தவிர வேறு யாரும் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்’ என்று கூறினார்கள். பின்னர் தொடர்ந்து என் பரிந்துரையின் மூலம் மறுமையில் நற்பாக்கியம் பெறுபவர்கள் யார் என்றால், எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும், இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவாரோ அவர் தான் என்றார்கள்.
ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
1. தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்து விட்டால், அதன்பிறகு இனிமேல் அந்த பாவத்தை செய்யமாட்டேன் உள்ளத்தால் உறுதி கொள்ள வேண்டும்.
2. பாவத்தை விட்டு நீங்க வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி செய்த பின்னர் அதை மனதால் செயல்படுத்தவும் முன்வர வேண்டும்.
3. இதையும் மீறி பாவம் செய்தால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் மனதில் ஏற்பட வேண்டும்.
4. யார் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இறைவன் கூறிஇருக்கிறான். அதன்படி பாவமன்னிப்பு கேட்கும் எனது பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படும் என்று மனதில் உறுதியாக எண்ணம் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இந்த நான்கும் உள்ளம் சார்ந்தது. இனி உடல் சார்ந்த 4 விஷயங்கள்:
5. ஏதேனும் பாவம் செய்து விட்டால், உடனே இறைவனிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்று மனதில் முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உடலை சுத்தம் செய்து பள்ளிவாசல் வரவேண்டும். அங்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும்.
6. தொழுகை முடிந்த பின்னர் 70 முறை ‘அஸ்தஃபிருல்லாஹ் ரப்பீ மின்குல்லி தன்பின்வ கதீஅதின் வஅதூபு இலைஹி’ என்று கூற வேண்டும். (இதன் பொருள் : ‘ எனது எல்லாப்பாவங்களில் இருந்தும் இறைவனிடம் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். நான் இறைவனின் பக்கமே மீண்டு விட்டேன்’ என்பதாகும்). அடுத்து ‘ சுப்ஹான ரப்பியல் அளீம் வபிஹம் திஹி’ என்று 100 முறை கூற வேண்டும்.
7. தன்னால் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
8. பாவ மன்னிப்பு வேண்டி ஒருநாள் நோன்பு இருக்க வேண்டும்.
ஒருவன் இந்த எட்டு நிலைகளையும் சரியாக கடைப்பிடித்துவிட்டால் அவனது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்து திருக்குர்ஆன் (11:114,115) இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்’.
எனவே இந்த புனிதமிகு ரமலானில் நல்லறங்களை அதிகம் செய்து இறைவனிடம் பாவ மன்னிப்பை பெற்று சுவனபதியில் இடம் பெற நான் அனைவரும் முயற்சி செய்வோம், ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
(மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)
புனிதமான இந்த ரமலான் காலங்களில் மிக அதிகமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும். ஏன் என்றால் மறுமை நாளில் ஒரு மனிதருக்கு சிபாரிசு செய்யக்கூடிய அந்தஸ்து கொண்டவை நோன்பும், திருக்குர்ஆனும். இவை இரண்டும் மறுமைநாளில் அல்லாஹ்விடம் ‘இந்த மனிதன் நோன்பு வைத்து திருக்குர்ஆன் ஓதியதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம். இதற்காக இவனுக்கு நீ சொர்க்கத்தை அளிப்பாயாக’ எனறு இறைவனிடம் சிபாரிசு செய்யும்.
சிறப்புகள் மிகுந்த திருக்குர்ஆன் ஒரு ரமலான் மாதத்தில் தான் இறக்கப்பட்டது. அந்த திருக்குர்ஆன் மீது நம்பிக்கை கொண்டு அதை ஓதி வருபவர்களுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கம் ஆகும். இதை புறக்கணித்தவர்கள் நஷ்டம் அடைந்தவர் ஆவார். இது குறித்த வசனங்கள் வருமாறு:
ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் -(என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 2:185)
‘எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். இவர்கள் இதன் மீது (இந்தக்குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமைந்தவர்களாவர்’. (திருக்குர்ஆன் 2:212)
‘எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப்பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (“ஈஸா”வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் அருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். (திருக்குர்ஆன் 11:17)
(மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)
திருக்குர்ஆனை தொடர்ந்து ஓதி வருபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று இறைவன் வாக்களித்துள்ளான். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த சொர்க்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இம்மையில் எப்போதும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த மனிதன் மறுமையில் சொர்க்கம் செல்வான். அப்போது அந்த மனிதனிடம், இறைவனின் நல்லடியாரே, நீர் திருக்குர்ஆனை நிதானமாக ஓதியபடி சொர்க்கத்திற்கு செல். நீ ஓதும் திருக்குர்ஆன் வாசகங்களை எந்த இடத்தில் முடிக்கிறாயோ அவ்வளவு தூரும் உள்ள இடமும் உனக்குத்தான். இதுவே சொர்க்கத்தில் நீ தங்குமிடமாகும்.
இந்த ரமலான் காலத்தில் அதிகமாக திருக்குர்ஆர்ஓதுவோம். சொர்க்கவாதியாக இறைவனின் அருளைப்பெறுவோம், ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
சிறப்புகள் மிகுந்த திருக்குர்ஆன் ஒரு ரமலான் மாதத்தில் தான் இறக்கப்பட்டது. அந்த திருக்குர்ஆன் மீது நம்பிக்கை கொண்டு அதை ஓதி வருபவர்களுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கம் ஆகும். இதை புறக்கணித்தவர்கள் நஷ்டம் அடைந்தவர் ஆவார். இது குறித்த வசனங்கள் வருமாறு:
ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் -(என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 2:185)
‘எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். இவர்கள் இதன் மீது (இந்தக்குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமைந்தவர்களாவர்’. (திருக்குர்ஆன் 2:212)
‘எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப்பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (“ஈஸா”வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் அருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். (திருக்குர்ஆன் 11:17)
(மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)
திருக்குர்ஆனை தொடர்ந்து ஓதி வருபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று இறைவன் வாக்களித்துள்ளான். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த சொர்க்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இம்மையில் எப்போதும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த மனிதன் மறுமையில் சொர்க்கம் செல்வான். அப்போது அந்த மனிதனிடம், இறைவனின் நல்லடியாரே, நீர் திருக்குர்ஆனை நிதானமாக ஓதியபடி சொர்க்கத்திற்கு செல். நீ ஓதும் திருக்குர்ஆன் வாசகங்களை எந்த இடத்தில் முடிக்கிறாயோ அவ்வளவு தூரும் உள்ள இடமும் உனக்குத்தான். இதுவே சொர்க்கத்தில் நீ தங்குமிடமாகும்.
இந்த ரமலான் காலத்தில் அதிகமாக திருக்குர்ஆர்ஓதுவோம். சொர்க்கவாதியாக இறைவனின் அருளைப்பெறுவோம், ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘நபியே நான் சுவனம் செல்ல விரும்புகிறேன். இதற்கு உதவும் வகையில் நான் கடைபிடிக்க வேண்டியநற்செயல்களை எனக்கு சொல்லித்தாருங்கள்’ என்ற கேட்டார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட 4 நற்செயல்கள் குறித்து கூறினார்கள்.
உணவு வழங்குதல்: பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு வயிறார உணவு கொடுக்க வேண்டும். அதுபோல தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு முகம் சுளிக்காமல், சளைக்காமல் உணவு அளித்து உபசரிக்க வேண்டும். ‘எவர் அல்லாஹ் மீதும், மறுமை மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் விருந்தாளிகளை மகிழ்வித்து கண்ணியப்படுத்த வேண்டும்’.
ஸலாம் கூறுதல் : மனிதர்கள் வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும் அளிக்கும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொற்களை அதிகம் பரப்ப வேண்டும். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எதிரில் இருப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், அரவணைப்பும் பரவ ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொல் உதவும். சுவனம் செல்லவும் இது வழிகாட்டும். மேலும் ஸலாம் கூற முந்திக்கொள்ள வேண்டும். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த பாகுபாடும் இன்றி ஸலாம் கூறப்பட வேண்டும். இதன் மூலம் அவரது மனதில் பெருமையும், அகங்காரமும் அழியும். எவரிடம் பெருமை இல்லையோ அவர் நிச்சயம் சொர்க்கம் செல்வார்.
சொந்தங்களுடன் சேர்ந்து வாழுங்கள் : எவர் அல்லாஹ் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தனது சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும். எவர் தனது ஆயுளிலும், உணவிலும் இறைஅருள் வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும்.
இரவு வணக்கம் : மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும் இரவு நேரத்தில் இறைவனை நினைத்து தொழுகை நடத்த வேண்டும். இதன் மூலம் இறைவனின் நல்லடியார்களின் ஒருவராக நாம் ஆக முடியும். இதன் மூலம் சொர்க்கத்தையும் நாம் இறைவனிடம் இருந்து பரிசாக பெறமுடியும்.
நபிகளார் குறிப்பிட்ட இந்த 4 நற்செயல்களை செய்வதன் மூலம் எளிதில் சுவனம் செல்ல முடியும்.
முன்பின் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு சொர்க்கவாதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் இரவில் நீண்ட நேரம் நின்று தொழுகையில் ஈடுபடும் வழக்கம் நபிகளிடம் இருந்தது. இறைவனின் நல்லடியானாகவே இவ்வாறு நபிகள் நற்செயல்கள் செய்தார்கள்.
நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில், காஷிபி, தாங்கல், சென்னை.
உணவு வழங்குதல்: பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு வயிறார உணவு கொடுக்க வேண்டும். அதுபோல தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு முகம் சுளிக்காமல், சளைக்காமல் உணவு அளித்து உபசரிக்க வேண்டும். ‘எவர் அல்லாஹ் மீதும், மறுமை மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் விருந்தாளிகளை மகிழ்வித்து கண்ணியப்படுத்த வேண்டும்’.
ஸலாம் கூறுதல் : மனிதர்கள் வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும் அளிக்கும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொற்களை அதிகம் பரப்ப வேண்டும். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எதிரில் இருப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், அரவணைப்பும் பரவ ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொல் உதவும். சுவனம் செல்லவும் இது வழிகாட்டும். மேலும் ஸலாம் கூற முந்திக்கொள்ள வேண்டும். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்த பாகுபாடும் இன்றி ஸலாம் கூறப்பட வேண்டும். இதன் மூலம் அவரது மனதில் பெருமையும், அகங்காரமும் அழியும். எவரிடம் பெருமை இல்லையோ அவர் நிச்சயம் சொர்க்கம் செல்வார்.
சொந்தங்களுடன் சேர்ந்து வாழுங்கள் : எவர் அல்லாஹ் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தனது சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும். எவர் தனது ஆயுளிலும், உணவிலும் இறைஅருள் வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் சொந்தங்களுடன் சேர்ந்து வாழட்டும்.
இரவு வணக்கம் : மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும் இரவு நேரத்தில் இறைவனை நினைத்து தொழுகை நடத்த வேண்டும். இதன் மூலம் இறைவனின் நல்லடியார்களின் ஒருவராக நாம் ஆக முடியும். இதன் மூலம் சொர்க்கத்தையும் நாம் இறைவனிடம் இருந்து பரிசாக பெறமுடியும்.
நபிகளார் குறிப்பிட்ட இந்த 4 நற்செயல்களை செய்வதன் மூலம் எளிதில் சுவனம் செல்ல முடியும்.
முன்பின் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு சொர்க்கவாதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் இரவில் நீண்ட நேரம் நின்று தொழுகையில் ஈடுபடும் வழக்கம் நபிகளிடம் இருந்தது. இறைவனின் நல்லடியானாகவே இவ்வாறு நபிகள் நற்செயல்கள் செய்தார்கள்.
நாமும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியில் நடந்து நற்செயல்கள் செய்து இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாற வேண்டும். இதன் மூலம் சொர்க்கத்தையும் பரிசாக பெற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகா, ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில், காஷிபி, தாங்கல், சென்னை.
‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)
புனித ரமலானில் நோக்கமே ‘ இறைவனின் நல்லடியார்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது தான்’. தனது நல்லடியார்கள் சுவனம் செல்ல எளிய வழிமுறைகளையும் இறைவன் தந்துள்ளான்.
அதில் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பது. இதன் மூலம் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.
‘அல்லாஹ்புக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்’ என்று திருக்குர்ஆன் (3:132) வழிகாட்டுகிறது.
‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், கவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் திருக்குர்ஆன் (3:133) குறிப்பிடுகிறது.
மேலும், சொர்க்கம் செல்ல உதவும் நற்செயல்கள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள், முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு அவர்களுக்குக்கிடைத்துக்கொண்டே இருக்கும்)’.
‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)
இறைவனின் நேசத்தைப்பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் (3:134) இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றார்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள், மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
அத்துடன் மறுமைநாளில் இறைவனின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும், நமது நன்மை, தீமைக்கு ஏற்ப இறைவனிடம் கூலி கிக்கும் என்பதையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வாழ்பவர்களின் தங்குமிடம் சொர்க்கம் என்கிறது திருக்குர்ஆன்(79:40-41),
‘மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளை விட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ, அவனுடைய இருப்பிடம் கவனமாக இருக்கும்’.
இந்த புதிதமான ரமலான் காலத்திலும் நமது வாழ்நாள் முழுவதிலும் இறைவனுக்கு அஞ்சி நடந்து, நற்செயல்கள் செய்து சுவனத்தில் இடம்பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
அதில் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பது. இதன் மூலம் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.
‘அல்லாஹ்புக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்’ என்று திருக்குர்ஆன் (3:132) வழிகாட்டுகிறது.
‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், கவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் திருக்குர்ஆன் (3:133) குறிப்பிடுகிறது.
மேலும், சொர்க்கம் செல்ல உதவும் நற்செயல்கள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள், முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு அவர்களுக்குக்கிடைத்துக்கொண்டே இருக்கும்)’.
‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)
இறைவனின் நேசத்தைப்பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் (3:134) இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றார்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள், மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
அத்துடன் மறுமைநாளில் இறைவனின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும், நமது நன்மை, தீமைக்கு ஏற்ப இறைவனிடம் கூலி கிக்கும் என்பதையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வாழ்பவர்களின் தங்குமிடம் சொர்க்கம் என்கிறது திருக்குர்ஆன்(79:40-41),
‘மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளை விட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ, அவனுடைய இருப்பிடம் கவனமாக இருக்கும்’.
இந்த புதிதமான ரமலான் காலத்திலும் நமது வாழ்நாள் முழுவதிலும் இறைவனுக்கு அஞ்சி நடந்து, நற்செயல்கள் செய்து சுவனத்தில் இடம்பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.
ரமலான் மாதம் வெற்றிகளை தேடித்தரும் மாதமாகும். இதற்கு உதாரணமாக பத்ர்யுத்த நிகழ்வை குறிப்பிடலாம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை, அவரது 40-வது வயதில் இறைத்தூதராக ஆக்கினான் இறைவன். மக்கா நகரில் 13 ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரத்தை நபிகளார் மேற்கொண்டார்கள். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் கட்டளையை நபிகளார் நிறைவேற்றினார்கள். பின்னர் மக்காவை விட்டு மதீனா செல்லும்படி அவர்களுக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான். இதையடுத்து நபிகளார் தனது கூட்டத்தாருடன் மதீனா சென்றார்கள்.
மதீனா வந்து ஓராண்டுக்கு பிறகு நபிகளாருக்கு ஒரு செய்தி வந்தது. நபிகளாரை மிகக்கடுமையாக எதிர்த்த அபூ சுப்யான் தலைமையில் ஒரு வியாபாரக்கூட்டம் ஷாம்தேசத்தில் இருந்து மதீனா வழியாக மக்கா செல்வதாக தகவல் வந்தது.
தங்களுக்கு எதிராக உள்ள கூட்டத்தை அந்த வழியாக செல்லவிடாமல் தடுக்க நபிகளாரின் தோழர்கள் விரும்பினார்கள். நபிகளாரும் இதற்கு அனுமதி கொடுக்கவே 319 நபர்கள் கொண்ட ஒரு சிறிய கடை சென்றது. அவர்களிடம் 2 குதிரைகள், 70 கோ வேறு கழுதைகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.
இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்த அபூ சுப்யான் தனது கூட்டத்தில் இருந்த ஒருவரை குதிரையில் மக்காவுக்கு அனுப்பி பெரும்படையை வரவழைத்தார். குறைந்த எண்ணிக்கையில் இருந்த இறை நம்பிக்கையாளர்கள் கூட்டத்திற்கும், அதிக எண்ணிக்கையில் இருந்த இறை நிராகரிப்பாளர்கள் கூட்டத்திற்கும் இடையே பத்ர் என்ற இடத்தில் யுத்தம் நடந்தது.
யுத்தம் தொடங்கும் முன்பு நபிகளார் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் இதை ஏற்றுக்கொண்டான். அல்லாஸ் வானவர்களை அனுப்பி வைத்தான். ஆயிரக்கணக்கில் வந்த வானவர்கள் நபிகளாரின் படைகளுடன் சேர்ந்து போரிட்டனர். முடிவில் இறைநம்பிக்கையாளர்களின் கூட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.
இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
‘பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளை விட ஆயுதத்திலும் தொலையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்கு பயந்து(வழிப்பட்டு) நடங்கள்’.
‘(நபியே அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்கள் நோக்கி “(வானத்திலிருந்து)இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று கூறியதையும் ஞாபகமூட்டுகள்’. (திருக்குர்ஆன் 3:123,124)
வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை, அவரது 40-வது வயதில் இறைத்தூதராக ஆக்கினான் இறைவன். மக்கா நகரில் 13 ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரத்தை நபிகளார் மேற்கொண்டார்கள். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் கட்டளையை நபிகளார் நிறைவேற்றினார்கள். பின்னர் மக்காவை விட்டு மதீனா செல்லும்படி அவர்களுக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான். இதையடுத்து நபிகளார் தனது கூட்டத்தாருடன் மதீனா சென்றார்கள்.
மதீனா வந்து ஓராண்டுக்கு பிறகு நபிகளாருக்கு ஒரு செய்தி வந்தது. நபிகளாரை மிகக்கடுமையாக எதிர்த்த அபூ சுப்யான் தலைமையில் ஒரு வியாபாரக்கூட்டம் ஷாம்தேசத்தில் இருந்து மதீனா வழியாக மக்கா செல்வதாக தகவல் வந்தது.
தங்களுக்கு எதிராக உள்ள கூட்டத்தை அந்த வழியாக செல்லவிடாமல் தடுக்க நபிகளாரின் தோழர்கள் விரும்பினார்கள். நபிகளாரும் இதற்கு அனுமதி கொடுக்கவே 319 நபர்கள் கொண்ட ஒரு சிறிய கடை சென்றது. அவர்களிடம் 2 குதிரைகள், 70 கோ வேறு கழுதைகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.
இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்த அபூ சுப்யான் தனது கூட்டத்தில் இருந்த ஒருவரை குதிரையில் மக்காவுக்கு அனுப்பி பெரும்படையை வரவழைத்தார். குறைந்த எண்ணிக்கையில் இருந்த இறை நம்பிக்கையாளர்கள் கூட்டத்திற்கும், அதிக எண்ணிக்கையில் இருந்த இறை நிராகரிப்பாளர்கள் கூட்டத்திற்கும் இடையே பத்ர் என்ற இடத்தில் யுத்தம் நடந்தது.
யுத்தம் தொடங்கும் முன்பு நபிகளார் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் இதை ஏற்றுக்கொண்டான். அல்லாஸ் வானவர்களை அனுப்பி வைத்தான். ஆயிரக்கணக்கில் வந்த வானவர்கள் நபிகளாரின் படைகளுடன் சேர்ந்து போரிட்டனர். முடிவில் இறைநம்பிக்கையாளர்களின் கூட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.
இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
‘பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளை விட ஆயுதத்திலும் தொலையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்கு பயந்து(வழிப்பட்டு) நடங்கள்’.
‘(நபியே அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்கள் நோக்கி “(வானத்திலிருந்து)இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று கூறியதையும் ஞாபகமூட்டுகள்’. (திருக்குர்ஆன் 3:123,124)
வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
“இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதம் குறித்து கூறும் போது, ‘ இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சொர்க்கம்’ என்றார்கள்.
பொறுமை குறித்து இறைவன், திருக்குர்ஆனில் (2:153) இவ்வாறு கூறுகிறான்: “இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.
பொறுமையை மேற்கொள்வது என்பது 3 நிலைகளில் அமையும். இதில் முதலிடம் பிடிப்பது, ‘அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் பொறுமை ஏற்படுவது’.
இறைவனை தினமும் 5 நேரம் வணங்குவது என்பது அனைவருக்கும் எளிதான செயலாக அமைவதில்லை. உலக வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிரமங்கள், அதிக குளிர், அதிக வெப்பம், மழை, தூக்கம், சோம்பல் போன்ற தடைகள், உடல்நிலையில் பின்னடைவு, தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்ற நெருக்கடிகள் இறைவணக்கத்திற்கு தடையை ஏற்படுத்தலாம். அது போன்ற நேரங்களில் இறைவணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
பொறுமை என்பது சோதனை ஏற்பட்ட உடனே வரவேண்டும். எல்லா நிலைகளையும் கடந்து தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வரும் போது இனி இறைவன் விட்டவழி என்று கூறுவது பொறுமை அல்ல, இயலாமை.
இரண்டாவது நிலை, இறைவனுக்கு மாறு செய்வதில் இருந்து விலகி இருத்தல். பாவமான காரியங்கள் அனைத்தும் இன்பமானவை. இருப்பினும் அதைவிட்டு விலகி பொறுமையுடன் இருப்பது அவசியம். ஏன் என்றால் இறைவனால் தடுக்கப்பட்டவற்றில் இருந்து எவ்வளவு இன்பம் வந்தாலும் அது ஷைத்தானின் செயலாகவே இருக்கும். எனவே அதில் இருந்து விலகி பொறுமையுடன் இருப்பதே இறைவழியில் நடப்பதாகும்.
மூன்றாவது நிலை: சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அதற்கு தீயவழியில்தீர்வு தேடுவது கூடாது. பொறுமையுடன் இருந்து இறைவனின் துணையுடன் அதை வெற்றிகொள்ள முன்வர வேண்டும்.
இதுகுறித்து திருக்குர்ஆன்(2:155) குறிப்பிடும் போது, ‘(நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே இச்சோதனைகயால் ஏற்படும் கஷ்டங்களை) சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள நற்செய்தி கூறுங்கள்’ என்று தெரிவிக்கிறது.
மேலும் பொறுமையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எது என்பது குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
‘அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்‘( திருக்குர்ஆன் 2:156, 157)
இந்த புனித ரமலானில் நாம் பொறுமையாளர்களாய் இருந்து இறைவனின் அருளைப்பெற முயற்சி செய்வோம். ஆமீன்.
வடகரை, ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
பொறுமை குறித்து இறைவன், திருக்குர்ஆனில் (2:153) இவ்வாறு கூறுகிறான்: “இறை நம்பிக்கை கொண்டவர்களே, பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்: நிச்சயம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்”.
பொறுமையை மேற்கொள்வது என்பது 3 நிலைகளில் அமையும். இதில் முதலிடம் பிடிப்பது, ‘அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் பொறுமை ஏற்படுவது’.
இறைவனை தினமும் 5 நேரம் வணங்குவது என்பது அனைவருக்கும் எளிதான செயலாக அமைவதில்லை. உலக வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிரமங்கள், அதிக குளிர், அதிக வெப்பம், மழை, தூக்கம், சோம்பல் போன்ற தடைகள், உடல்நிலையில் பின்னடைவு, தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்ற நெருக்கடிகள் இறைவணக்கத்திற்கு தடையை ஏற்படுத்தலாம். அது போன்ற நேரங்களில் இறைவணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
பொறுமை என்பது சோதனை ஏற்பட்ட உடனே வரவேண்டும். எல்லா நிலைகளையும் கடந்து தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வரும் போது இனி இறைவன் விட்டவழி என்று கூறுவது பொறுமை அல்ல, இயலாமை.
இரண்டாவது நிலை, இறைவனுக்கு மாறு செய்வதில் இருந்து விலகி இருத்தல். பாவமான காரியங்கள் அனைத்தும் இன்பமானவை. இருப்பினும் அதைவிட்டு விலகி பொறுமையுடன் இருப்பது அவசியம். ஏன் என்றால் இறைவனால் தடுக்கப்பட்டவற்றில் இருந்து எவ்வளவு இன்பம் வந்தாலும் அது ஷைத்தானின் செயலாகவே இருக்கும். எனவே அதில் இருந்து விலகி பொறுமையுடன் இருப்பதே இறைவழியில் நடப்பதாகும்.
மூன்றாவது நிலை: சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அதற்கு தீயவழியில்தீர்வு தேடுவது கூடாது. பொறுமையுடன் இருந்து இறைவனின் துணையுடன் அதை வெற்றிகொள்ள முன்வர வேண்டும்.
இதுகுறித்து திருக்குர்ஆன்(2:155) குறிப்பிடும் போது, ‘(நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே இச்சோதனைகயால் ஏற்படும் கஷ்டங்களை) சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள நற்செய்தி கூறுங்கள்’ என்று தெரிவிக்கிறது.
மேலும் பொறுமையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எது என்பது குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
‘அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்‘( திருக்குர்ஆன் 2:156, 157)
இந்த புனித ரமலானில் நாம் பொறுமையாளர்களாய் இருந்து இறைவனின் அருளைப்பெற முயற்சி செய்வோம். ஆமீன்.
வடகரை, ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
இறைவன், படைப்பினங்களை மூன்று நிலையில் படைத்துள்ளான். அவை: மலக்குகள் (வானவர்கள்), ஷைத்தான்கள், மனிதர்கள்.
குற்றமே செய்யாத, செய்யத்தெரியாத படைப்பு, வானவர்கள், இறைவன் அவர்களுக்கு என்ன கட்டளையிட்டானோ அதை அப்படியே ஏற்று செய்யக்கூடியவர்கள். இது குறித்து திருக்குர்ஆன் 66:7 இவ்வாறு குறிப்பிடுகிறது:‘ அல்லாஹ் ஏவிய எதிலும் மலக்குகள் மாறு செய்யமாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்ட படியே அவர்கள் செய்து வருவார்கள்’.
இறைவனுக்கு முற்றிலும் மாறுசெய்யக்கூடியவர்கள் ஷைத்தான்கள். இவர்களிடம் எந்ந நல்ல செயலையும் காணமுடியாது. இன்னும் சொல்வதென்றால், நல்லது செய்வோரை தடுக்கவும் செய்வார்கள். மறுமையில் இவர்களது புகலிடம் நரகம் தான்.
மனிதன் நல்லதும் செய்வான், தீமையும் செய்வான். நற்காரிங்கள் மட்டும் செய்யும் மனிதன், இறைவனின் முதல் படைப்பான வானவர்களை விட உயர்ந்த நிலையை பெறுவான். தீமையான செயல்களை செய்பவன் ஷைத்தானை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு நரக நெருப்பில் கருகுவான்.
இதுபற்றி இறைவன் கூறும் போது, ‘நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்து கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) நரகத்தில் தள்ளிவிடுவோம்’ என்று எச்சரிக்கை செய்கிறான். (திருக்குர்ஆன் 19:72)
மேலும் பாவங்கள் செய்தவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ ஒருவர் மானக்கேடான செயலைச்செய்து விட்டால் அல்லது(ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புகோருவார்கள். (ஏனெனில் ) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்’.
‘இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் கவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்’. (திருக்குர்ஆன் 3:135,136).
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘ ஆதம் உடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்கள் தாம். ஆனால் அவர்களில் சிறந்தவர் யாரென்றால், எவர் தம் பாவத்தை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுகிறாரோ அவர் தான்’ என்று கூறியுள்ளார்கள்.
இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
வடகரை. ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
குற்றமே செய்யாத, செய்யத்தெரியாத படைப்பு, வானவர்கள், இறைவன் அவர்களுக்கு என்ன கட்டளையிட்டானோ அதை அப்படியே ஏற்று செய்யக்கூடியவர்கள். இது குறித்து திருக்குர்ஆன் 66:7 இவ்வாறு குறிப்பிடுகிறது:‘ அல்லாஹ் ஏவிய எதிலும் மலக்குகள் மாறு செய்யமாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்ட படியே அவர்கள் செய்து வருவார்கள்’.
இறைவனுக்கு முற்றிலும் மாறுசெய்யக்கூடியவர்கள் ஷைத்தான்கள். இவர்களிடம் எந்ந நல்ல செயலையும் காணமுடியாது. இன்னும் சொல்வதென்றால், நல்லது செய்வோரை தடுக்கவும் செய்வார்கள். மறுமையில் இவர்களது புகலிடம் நரகம் தான்.
மனிதன் நல்லதும் செய்வான், தீமையும் செய்வான். நற்காரிங்கள் மட்டும் செய்யும் மனிதன், இறைவனின் முதல் படைப்பான வானவர்களை விட உயர்ந்த நிலையை பெறுவான். தீமையான செயல்களை செய்பவன் ஷைத்தானை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு நரக நெருப்பில் கருகுவான்.
இதுபற்றி இறைவன் கூறும் போது, ‘நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்து கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) நரகத்தில் தள்ளிவிடுவோம்’ என்று எச்சரிக்கை செய்கிறான். (திருக்குர்ஆன் 19:72)
மேலும் பாவங்கள் செய்தவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ ஒருவர் மானக்கேடான செயலைச்செய்து விட்டால் அல்லது(ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புகோருவார்கள். (ஏனெனில் ) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்’.
‘இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் கவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்’. (திருக்குர்ஆன் 3:135,136).
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘ ஆதம் உடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்கள் தாம். ஆனால் அவர்களில் சிறந்தவர் யாரென்றால், எவர் தம் பாவத்தை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுகிறாரோ அவர் தான்’ என்று கூறியுள்ளார்கள்.
இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
வடகரை. ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.
ரமலான் மாதத்தில் முதல் 10 நாட்கள் இறைவனின் அருளைப்பெறும் நாட்களாகும். நடுப்பகுதி 10 நாட்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் நாட்களாகும். முதல் 10 நாட்கள் மூலம் எவர் அல்லாஹ்வின் அருளைப்பெற்றுக்கொள்கிறாரோ அவருக்கு நடுப்பத்தில் ‘மக்பிரத்’ எனும் பாவமன்னிப்பு இறைவன் வழங்குகிறான்.
இது குறித்து திருக்குர்ஆன்(66:8) இவ்வாறு கூறுகிறது:
‘ஈமான் கொண்டவர்களே, கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்பு பெறுங்கள், உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களை கவனச்சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும்; (தன்)நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக, எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, நிச்சயமாக நீ எல்லாப்பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறிப் (பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
ஒருவர் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்றால் 4 முக்கிய நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை
1. தான் செய்த பாவத்திற்கான, பாவச்செயலுக்காக வருந்த வேண்டும்.
2. மீண்டும் அந்த பாவத்தை செய்ய மாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். அந்த உறுதியின் படி நடக்கவும் வேண்டும். இதன்படி மீண்டும் அந்த பாவத்தை செய்யலாமல் இருந்தால் இறைவன் நமது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான் என்பது அடையாளமாகும். ஆனால் மீண்டும் அந்த பாவத்தை செய்தால், இறைவனின் பாவமன்னிப்பு கிடைக்கவில்லை என்பது பொருளாகும்.
3. இறைவன் விதித்த கடமைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். மனிதர்களில் யாரிடமாவது, ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு பெற வேண்டும். ஏன் என்றால் அவர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்க மாட்டான்.
4. பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்பதை உணர்ந்து அறிந்து பயம் கொள்ள வேண்டும். அந்த பய உணர்வுடன் நடந்து கொண்டு பாவங்களில் இருந்து விலகிட வேண்டும்.
‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.
இறைவனின் திருப்பொருத்தத்தை பெறக்கூடியவர்களாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
இது குறித்து திருக்குர்ஆன்(66:8) இவ்வாறு கூறுகிறது:
‘ஈமான் கொண்டவர்களே, கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்பு பெறுங்கள், உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களை கவனச்சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும்; (தன்)நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக, எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, நிச்சயமாக நீ எல்லாப்பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறிப் (பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
ஒருவர் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்றால் 4 முக்கிய நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை
1. தான் செய்த பாவத்திற்கான, பாவச்செயலுக்காக வருந்த வேண்டும்.
2. மீண்டும் அந்த பாவத்தை செய்ய மாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். அந்த உறுதியின் படி நடக்கவும் வேண்டும். இதன்படி மீண்டும் அந்த பாவத்தை செய்யலாமல் இருந்தால் இறைவன் நமது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான் என்பது அடையாளமாகும். ஆனால் மீண்டும் அந்த பாவத்தை செய்தால், இறைவனின் பாவமன்னிப்பு கிடைக்கவில்லை என்பது பொருளாகும்.
3. இறைவன் விதித்த கடமைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். மனிதர்களில் யாரிடமாவது, ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு பெற வேண்டும். ஏன் என்றால் அவர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்க மாட்டான்.
4. பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்பதை உணர்ந்து அறிந்து பயம் கொள்ள வேண்டும். அந்த பய உணர்வுடன் நடந்து கொண்டு பாவங்களில் இருந்து விலகிட வேண்டும்.
‘எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்’ என்று திருக்குர்ஆன் (3:57) குறிப்பிடுகிறது.
இறைவனின் திருப்பொருத்தத்தை பெறக்கூடியவர்களாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேர முடியாது.
புனிதமான இந்த ரமலான் காலத்தில் நாம் செய்யும் நல்ல அமல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாவமன்னிப்பு கிடைத்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இதற்கு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான சொந்தங்களைப்பேணுதல் என்பதை நாம் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் வந்த போது, ஒரு கிராமவாசி அவரை வழிமறித்து, ‘இறைத்தூதரே, ஒரு மனிதனை சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும், நரகத்தை விட்டு தூரமாகவும் ஆக்குவதற்கு உரிய நற்செயல் எது? என்று கேட்டார்.
அதற்கு நபிகள் (ஸல்) கீழ்க்கண்ட 5 விஷயங்களை தெரிவித்தார்கள்.
1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்
2. எந்த நிலையிலும் இறைவனுக்கு இணைவைக்க கூடாது
3. கடமையாக்கப்பட்ட 5 நேரத்தொழுகையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்
4. இறைவனால் விதிக்கப்பட்ட ஜகாத்தை முழுமையாக கொடுக்க வேண்டும்.
5. சொந்தங்களை சேர்ந்திருக்க வேண்டும்.
சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேர முடியாது. நரகத்தின் மேல்போடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் ‘ஸிராத்துல் முஸ்தகீம்’. சொர்க்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும். இது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன்(19:71) இவ்வாறு குறிப்பிடுகிறது. ‘மேலும் அதனை (ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
தர்மம் செய்தல், சொந்தங்களுடன் சேர்த்து வாழ்தல், மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தல், எப்பொழுதும் அங்கசுத்தியுடன் (ஒளு) இருத்தல் மற்றும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஆகிய 5 விஷயங்களை ஒருவர் நிரந்தரமாக செய்தால் அவருக்கு மலை போன்ற அளவு நன்மையும், உணவு, உறைவிடத்தில் விசாலமும் கிடைக்கும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ மேலும் அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவு முறைகளை பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளை பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக்கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 13:21)
இறைவனின் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் சொர்க்கத்திலும் இடம் கிடைக்கும். எனவே இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் வந்த போது, ஒரு கிராமவாசி அவரை வழிமறித்து, ‘இறைத்தூதரே, ஒரு மனிதனை சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும், நரகத்தை விட்டு தூரமாகவும் ஆக்குவதற்கு உரிய நற்செயல் எது? என்று கேட்டார்.
அதற்கு நபிகள் (ஸல்) கீழ்க்கண்ட 5 விஷயங்களை தெரிவித்தார்கள்.
1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்
2. எந்த நிலையிலும் இறைவனுக்கு இணைவைக்க கூடாது
3. கடமையாக்கப்பட்ட 5 நேரத்தொழுகையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்
4. இறைவனால் விதிக்கப்பட்ட ஜகாத்தை முழுமையாக கொடுக்க வேண்டும்.
5. சொந்தங்களை சேர்ந்திருக்க வேண்டும்.
சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேர முடியாது. நரகத்தின் மேல்போடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் ‘ஸிராத்துல் முஸ்தகீம்’. சொர்க்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும். இது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன்(19:71) இவ்வாறு குறிப்பிடுகிறது. ‘மேலும் அதனை (ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
தர்மம் செய்தல், சொந்தங்களுடன் சேர்த்து வாழ்தல், மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தல், எப்பொழுதும் அங்கசுத்தியுடன் (ஒளு) இருத்தல் மற்றும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஆகிய 5 விஷயங்களை ஒருவர் நிரந்தரமாக செய்தால் அவருக்கு மலை போன்ற அளவு நன்மையும், உணவு, உறைவிடத்தில் விசாலமும் கிடைக்கும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ மேலும் அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவு முறைகளை பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளை பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக்கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 13:21)
இறைவனின் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் சொர்க்கத்திலும் இடம் கிடைக்கும். எனவே இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமலான் மாதம் பற்றி குறிப்பிடும்போது ‘இது மனிதர்களுடன் கலந்துறவாடும் மாதம்’ என்பார்கள். இந்த ரமலான் மாதத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் சுகதுக்கங்களில் கலந்துறவாடுவது போன்ற நன்மையான காரியங்களில் அதிகம் ஈடுபடவேண்டும்.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைக்கும் (ஸஹர்) நேரத்திலும், நோன்பு திறக்கும் (இப்தார்) நேரத்திலும் எவரேனும் ஒரு ஏழையை தன்னுடன் வைத்து அவருக்கும் உண்ணக்கொடுத்து, தானும் சாப்பிடுவார்கள். அப்படி யாரேனும் சாப்பிட வரவில்லை என்றால், எதுவுமே சாப்பிடாமல் பட்டினியாக நோன்பு வைப்பார்கள். தாங்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு கொடுப்பதை நபித்தோழர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
நோன்பு காலத்தில் ஒருநாள் ஹசரத் அலி(ரலி) அவரது மனைவி பாத்திமா(ரலி), அவர்களது மகன்கள் ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா(ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.
அலி (ரலி)யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்ஹம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்ஹம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்கள்.
பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஓட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி(ரலி)யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல பிறகு பணம் தாருங்கள் என்றார். அலி (ரலி)யும் அந்த ஓட்டகத்திற்கு 100 திர்ஹம் பணம் தருவதாக கூற வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது வேறு ஒருவர் அலி(ரலி)யிடம் இந்த ஓட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா என்றார். ஓட்டகத்திற்கு 1
60 திர்ஹம் விலை தருவதாகவும் கூறினார். அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்தை 160 திர்ஹமிற்கு விற்றார். அதில் 100 திர்ஹமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்ஹம் பணத்துடன் வீடு திரும்பினார்.
நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள், ‘அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்ஹமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்’ என்றார்கள்.
எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைக்கும் (ஸஹர்) நேரத்திலும், நோன்பு திறக்கும் (இப்தார்) நேரத்திலும் எவரேனும் ஒரு ஏழையை தன்னுடன் வைத்து அவருக்கும் உண்ணக்கொடுத்து, தானும் சாப்பிடுவார்கள். அப்படி யாரேனும் சாப்பிட வரவில்லை என்றால், எதுவுமே சாப்பிடாமல் பட்டினியாக நோன்பு வைப்பார்கள். தாங்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு கொடுப்பதை நபித்தோழர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
நோன்பு காலத்தில் ஒருநாள் ஹசரத் அலி(ரலி) அவரது மனைவி பாத்திமா(ரலி), அவர்களது மகன்கள் ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா(ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.
அலி (ரலி)யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்ஹம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்ஹம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்கள்.
பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஓட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி(ரலி)யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல பிறகு பணம் தாருங்கள் என்றார். அலி (ரலி)யும் அந்த ஓட்டகத்திற்கு 100 திர்ஹம் பணம் தருவதாக கூற வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது வேறு ஒருவர் அலி(ரலி)யிடம் இந்த ஓட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா என்றார். ஓட்டகத்திற்கு 1
60 திர்ஹம் விலை தருவதாகவும் கூறினார். அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்தை 160 திர்ஹமிற்கு விற்றார். அதில் 100 திர்ஹமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்ஹம் பணத்துடன் வீடு திரும்பினார்.
நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள், ‘அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்ஹமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்’ என்றார்கள்.
எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.
புனித மிகு ரமலான் காலத்தில் எந்த நேரமும் இறைவனின் நினைவிலேயே இருக்க வேண்டும். அதிகமாக ‘திக்ர்’ செய்ய வேண்டும். குறிப்பாக ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை அதிகம் சொல்ல வேண்டும். இறைவனை நினைவு கூற இது தான் சிறந்த சொல் ஆகும், இதை சொல்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
நபி மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ்விடம் ‘இறைவா, உயர்ந்த ஒரு கலிமாவை எனக்கு கற்றுக்கொடு’ என்று கேட்டார்கள். அப்போது இறைவன், ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள் என்றான்.
இதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘இறைவா, இந்தக்கலிமாவைத்தான் எல்லாரும் சொல்கிறார்களே’ என்ற போது, இறைவன் இவ்வாறு கூறினான்:
‘மூஸாவே, இந்தக்கலிமாவை ஒரு தட்டிலும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் மறு தட்டிலும் வைத்துப்பார். அப்போது கலிமா இருக்கும் தட்டு மட்டுமே கனமுள்ளதாக இருக்கும்’.
அந்த அளவுக்கு இந்த கலிமா சிறப்புமிக்கதாகும். இதை வலியுறுத்தும் வகையில் இந்தக்கலிமாவை அதிகமாக சொல்லிவருமாறு நபிகளாரும் கூடியிருக்கிறார்கள்.
ஒருமுறை, அபூ ஷுரைரா(ரலி) அவர்கள் இறைத்தூதல் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ‘மறுமையில் உங்கள் பரிந்துரை மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், ‘என் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியங்கள் பெறுபவர் யார் என்றால் எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும் ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவாரோ அவர் தான்’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
பொதுவாகவே காலையிலும், மாலையிலும் இறைவனை அதிகமாக நினைவுகூர வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்துதி செய்யுங்கள்(33:41-42)
குறிப்பாக ரமலான் மாதம் இறையருள் பொழியும் மாதமாகும். இறைவன் கீழ்வானம் இறங்கிவந்து தம் அடியாருக்கு அருள்புரியும் மாதமாகும். இந்த காலங்களில் நாம் அதிகமாக தொழுகையிலும், இறைவனை திக்ர் செய்து நினைவு கூர்வதிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளுக்கு நாம் பாத்திரமாகலாம்.
அல்லாஹ் செய்யக்கூடிய அருளில் மிகப்பெரிய அருள் என்னவென்றால், நமது பாவங்களை மன்னிப்பது தான். அந்த மன்னிப்பு நமக்கு கிடைத்துவிட்டால் அதைவிட வேறு பெரிய பாக்கியம் எதுவாக இருக்க முடியும்.
எனவே இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நபி மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ்விடம் ‘இறைவா, உயர்ந்த ஒரு கலிமாவை எனக்கு கற்றுக்கொடு’ என்று கேட்டார்கள். அப்போது இறைவன், ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள் என்றான்.
இதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘இறைவா, இந்தக்கலிமாவைத்தான் எல்லாரும் சொல்கிறார்களே’ என்ற போது, இறைவன் இவ்வாறு கூறினான்:
‘மூஸாவே, இந்தக்கலிமாவை ஒரு தட்டிலும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் மறு தட்டிலும் வைத்துப்பார். அப்போது கலிமா இருக்கும் தட்டு மட்டுமே கனமுள்ளதாக இருக்கும்’.
அந்த அளவுக்கு இந்த கலிமா சிறப்புமிக்கதாகும். இதை வலியுறுத்தும் வகையில் இந்தக்கலிமாவை அதிகமாக சொல்லிவருமாறு நபிகளாரும் கூடியிருக்கிறார்கள்.
ஒருமுறை, அபூ ஷுரைரா(ரலி) அவர்கள் இறைத்தூதல் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ‘மறுமையில் உங்கள் பரிந்துரை மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், ‘என் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியங்கள் பெறுபவர் யார் என்றால் எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும் ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவாரோ அவர் தான்’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
பொதுவாகவே காலையிலும், மாலையிலும் இறைவனை அதிகமாக நினைவுகூர வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்துதி செய்யுங்கள்(33:41-42)
குறிப்பாக ரமலான் மாதம் இறையருள் பொழியும் மாதமாகும். இறைவன் கீழ்வானம் இறங்கிவந்து தம் அடியாருக்கு அருள்புரியும் மாதமாகும். இந்த காலங்களில் நாம் அதிகமாக தொழுகையிலும், இறைவனை திக்ர் செய்து நினைவு கூர்வதிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளுக்கு நாம் பாத்திரமாகலாம்.
அல்லாஹ் செய்யக்கூடிய அருளில் மிகப்பெரிய அருள் என்னவென்றால், நமது பாவங்களை மன்னிப்பது தான். அந்த மன்னிப்பு நமக்கு கிடைத்துவிட்டால் அதைவிட வேறு பெரிய பாக்கியம் எதுவாக இருக்க முடியும்.
எனவே இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது
புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது. இறைத்தூதர்கள் அனைவருக்கும் வேதங்களை வானில் இருந்து இறக்கி அருளினான் இறைவன். திருக்குர்ஆன் உள்பட அனைத்து வேதங்களும் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது.
நபி இப்ராகிம்(அலை) அவர்களுக்கு ‘சுஹ்பு’ என்னும் ஏடுகள் ரமலான் மாதம் முதல் நாளிலும், நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஜபூர்’ எனும் வேதத்தை 18-ம் நாளும், நபிமூசா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ எனும் வேதத்தை 12-ம் நாளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் 27-ம் நாளிலும் இறைவன் அருளினான்.
இது குறித்து திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து, நேரான வழியை தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.
இந்த ரமலான் நோன்பு காலத்தில் அதிகமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். மறுமை நாளில் யாரும் யாருக்கும் எந்த பரிந்துரையும் செய்ய முடியாத நாளில் நாம் ஓதிய திருக்குர்ஆனும், கடைபிடித்த நோன்பும் சொர்க்கத்தை அளிக்கும் படி நமக்காக இறைவனிடம் பரிந்துரை செய்யும்.
‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உண்ணாமல், பருகாமல் உனக்காக நோன்பு இருந்தான். எனவே இவனுக்காக இன்று நான் (நோன்பு) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று நோன்பு கூறும்.
‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உறங்காமல் விழித்திருந்து திருக்குர்ஆன் ஓதினான். எனவே அவனுக்காக இன்று நான் (திருக்குர்ஆன்) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று திருக்குர்ஆன் கூறும்.
இந்த இரு பரிந்துரைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டு அந்த மனிதனை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பான்.
திருக்குர்ஆனை தவறாமல் ஓதி வரவேண்டும் என்பது குறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘நாம் யாருக்கு வேதத்தை கொடுத்ததோமோ அத்தகையோர், அவர்கள் அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள் தான் இதை அல்லாஹ்வின் வேதமென விசுவாசிப்பார்கள்: மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ அத்தகையோர் தான் நஷ்டவாளர்கள். (திருக்குர்ஆன் 2:121)
இத்தனை மகிமை நிறைந்த திருக்குர்ஆனை இந்த நோன்பு காலத்தில் நாம் அதிகமாக ஓதி இறையருளுடன் மறுமையில் சொர்க்கத்தையும் பெறுவோம், ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நபி இப்ராகிம்(அலை) அவர்களுக்கு ‘சுஹ்பு’ என்னும் ஏடுகள் ரமலான் மாதம் முதல் நாளிலும், நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஜபூர்’ எனும் வேதத்தை 18-ம் நாளும், நபிமூசா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ எனும் வேதத்தை 12-ம் நாளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் 27-ம் நாளிலும் இறைவன் அருளினான்.
இது குறித்து திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து, நேரான வழியை தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.
இந்த ரமலான் நோன்பு காலத்தில் அதிகமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். மறுமை நாளில் யாரும் யாருக்கும் எந்த பரிந்துரையும் செய்ய முடியாத நாளில் நாம் ஓதிய திருக்குர்ஆனும், கடைபிடித்த நோன்பும் சொர்க்கத்தை அளிக்கும் படி நமக்காக இறைவனிடம் பரிந்துரை செய்யும்.
‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உண்ணாமல், பருகாமல் உனக்காக நோன்பு இருந்தான். எனவே இவனுக்காக இன்று நான் (நோன்பு) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று நோன்பு கூறும்.
‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உறங்காமல் விழித்திருந்து திருக்குர்ஆன் ஓதினான். எனவே அவனுக்காக இன்று நான் (திருக்குர்ஆன்) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று திருக்குர்ஆன் கூறும்.
இந்த இரு பரிந்துரைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டு அந்த மனிதனை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பான்.
திருக்குர்ஆனை தவறாமல் ஓதி வரவேண்டும் என்பது குறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘நாம் யாருக்கு வேதத்தை கொடுத்ததோமோ அத்தகையோர், அவர்கள் அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள் தான் இதை அல்லாஹ்வின் வேதமென விசுவாசிப்பார்கள்: மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ அத்தகையோர் தான் நஷ்டவாளர்கள். (திருக்குர்ஆன் 2:121)
இத்தனை மகிமை நிறைந்த திருக்குர்ஆனை இந்த நோன்பு காலத்தில் நாம் அதிகமாக ஓதி இறையருளுடன் மறுமையில் சொர்க்கத்தையும் பெறுவோம், ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.






