search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகூர் நூர்ஷா தைக்காலில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி
    X
    நாகூர் நூர்ஷா தைக்காலில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

    நாகூர் நூர்ஷா தைக்காலில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

    நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இரவு 7 மணிக்கு நூர்ஷா தைக்காலில் உள்ள நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டவர் சமாதிக்குதைக்கால் டிரஸ்டி உபைத்துர் ரஹ்மான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    இதில் இஸ்லாமியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர். இதற்கான பதுகாப்பு பணியில் நாகூர் போலீசார் ஈடுபட்டனர்.
    Next Story
    ×