search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
    X
    பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

    பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

    பக்ரீத் பண்டிகையையொட்டி ஏராளமான ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
    தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடினர்.

    இதையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. நாகர்கோவில் இளங்கடையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    வெளியூர்களில் வசிக்கும் நண்பர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக பக்ரீத் வாழ்த்து அனுப்பி மகிழ்ந்தனர். இதுபோல், திருவிதாங்கோடு, களியக்காவிளை, பூதப்பாண்டி போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×