என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவியின் சண்டை தீர்க்கும் தலம்
Byமாலை மலர்9 March 2021 8:43 AM GMT (Updated: 9 March 2021 8:43 AM GMT)
அவளிவநல்லூர் சாட்சிநாதரை வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர்.
அவளிவநல்லூர் கும்பகோணத்திலிருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.
இத்தல இறைவன் சாட்சிநாதர் என்றும் அம்மை சௌந்தர்யவல்லி என்று அழைப்படுகின்றனர். இத்தலம் காலை (காலை 8.30 முதல் 9.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் பாதிரி வனம் ஆகும். இத்தலத்தின் அர்ச்சகரின் மூத்த மகளான சுசீலை அம்மைநோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்திருந்தாள். தலயாத்திரிரை சென்று திரும்பிய சுசீலையின் கணவன் அர்ச்சகரின் இளைய மகளை தன் மனைவி என்றான்.
அர்ச்சகரின் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன் அம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி சுசீலையை அவள்தான் இவள் என்று சுசீலையை அவளது கணவனுக்கு அடையாளம் காட்டினார். எனவே இவ்வூர் அவளிவநல்லூர் என்றும், இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுசீலையும் இறைவனின் ஆணைப்படி திருக்குளத்தில் நீராடி கண்பார்வையும், அழகும் திரும்பப் பெற்றாள்.
இத்தல இறைவனை வராக மூர்த்தியும், காசியப்ப முனிவரும் வழிபட்டு பேறு பெற்றனர். இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 100-வது தலமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X