
இவ்வாறு முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டால் துன்பங்கள் விலகி, ஆயுள் அதிகரிக்கும். செல்வ வளமும் பெருகும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் யாத்திரையாக செய்தால் பிணி (நோய்) நீங்கி உடல் ஆரோக்கியம் கிட்டும். வேளாண் விளைச்சல் பெருகி விவசாயிகளின் மனக்கவலை நீங்கும். குழந்தை செல்வம் கிடைக்கும் என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர்.
பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். ஆகவே காவடி எடுத்து பழனி முருகனின் அருளை பெற்று செல்வோம்.