என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருடன்
    X
    கருடன்

    ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்தால் தீரும் பிரச்சனைகள்

    ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை பற்றியும், தீரும் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழக்கிழமை பஞ்சமி திதியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனைத் தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:-

    ஞாயிறு : பிணி விலகும்.

    திங்கள் : குடும்ப நலம் பெருகும்.

    செவ்வாய் : துணிவு பிறக்கும்.

    புதன் : பகைவர் தொல்லை நீங்கும்.

    வியாழன் : நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    வெள்ளி : திருமகள் திருவருள் கிட்டும்.

    சனி : முக்தி அடையலாம்.
    Next Story
    ×