search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    திருமண வரம் தரும் உற்சவர்

    வெண்ணந்தூரில் முத்துக்குமார சுவாமி கோவில் உற்சவமூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, திருமணத் தடை உள்ளவர்கள் வடை மாலை அணிவித்து வணங்கினால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ளது வெண்ணந்தூர். இதன் தென்மேற்கில் திருச்செங்கோடு மலையில் அர்த்தநாரீஸ்வரர். தென் கிழக்கில் அலவாய் மலையில் சுப்ராயர் என்ற சுப்பிரமணியர். வடமேற்கில் கஞ்சமலையில் சித்தேஸ்வரர் ஆகியோர் அருள்புரிகிறார்கள்.

    வடகிழக்கில் சீதை விரும்பி கேட்ட மானைப் பிடிக்க, ராமர் விரட்டிச் சென்ற பொய்மான் கரடு உள்ளது. மேற்கில் திருமணிமுத்தாறும், கிழக்கில் அத்தனூர் அம்மன் கோவிலும் உள்ளன. இந்தச் சூழலில் உள்ள வெண்ணந்தூரில் முத்துக்குமார சுவாமி கோவில் கொண்டிருக்கிறார்.

    இங்கு உற்சவராக வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் அருள்கிறார். இந்த உற்சவமூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, திருமணத் தடை உள்ளவர்கள் வடை மாலை அணிவித்து வணங்கினால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×