search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோ பூஜை
    X
    கோ பூஜை

    பசு தானம்-பூஜையால் தீரும் பிரச்சனைகள்

    கோ பூஜை, பசு தானம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, சனி தோஷம் போன்ற பிரச்சனைகள் தீரும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பாக்கியம் பெற

    கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள்பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.

    திருமணம் நடைபெற

    நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறா திருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற் றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும். ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வும்,கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

    வியாதி நீங்க :

    ரோகம், வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜை யினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

    பிதுர் சாபம் தீர :

    பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்கு கிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.

    சனி தோஷம் விலக

    சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும். இத்தகு அதி விசேஷமான, மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும்.

    Next Story
    ×