என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண தடை நீக்கும் திருநீர்மலை ஸ்ரீதூமகேது விநாயகர்
Byமாலை மலர்5 Sep 2019 6:02 AM GMT (Updated: 5 Sep 2019 6:02 AM GMT)
ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், திருநீர்மலை ஸ்ரீதூமகேது விநாயகர் ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் சென்னையில் உள்ள திருநீர்மலை புராணகால முக்கியத்துவம் பெற்றது. இங்குள்ள மணிகர்ணிகா தடாகம் என்ற திருக்குளத்தின் கரையில்தான் ராகு-கேது தோஷங்களை போக்கும் தூமகேது விநாயகர் ஆலயம் உள்ளது. தூமம் என்றால் ராகு என்றும், கேது என்றால் ஞானகாரகன் கேதுவையும் குறிக்கும். இந்த இரண்டு ரூபமும் சேர்ந்தவர்தான் தூமகேது கணபதி. மேலும் ஆகம வரிசைப்படி, புகை வடிவ தூமராசன் என்ற அரக்கனை அழித்த ரூபமான தூமகேது என்றும் புகழப்படுகிறார்.
ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும். திருமணம் நீண்ட நாட்களாக தடைபட்டால், அதற்குரிய பரிகாரத்தை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எட்டு மணி முதல் பதினோரு மணி வரை, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்காக, சந்தான கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.
விசேஷ திராவிய ஹோமம் முடிந்ததும், மிகப்பெரிய வலம்புரி சங்கால் பால் அபிஷேகம் தூமகேது கணபதிக்கு நடத்தப்பட்டு, அன்று வரும் அனைத்து கணவன்-மனைவிக்கும் சங்கு பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும். திருமணம் நீண்ட நாட்களாக தடைபட்டால், அதற்குரிய பரிகாரத்தை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எட்டு மணி முதல் பதினோரு மணி வரை, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்காக, சந்தான கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.
விசேஷ திராவிய ஹோமம் முடிந்ததும், மிகப்பெரிய வலம்புரி சங்கால் பால் அபிஷேகம் தூமகேது கணபதிக்கு நடத்தப்பட்டு, அன்று வரும் அனைத்து கணவன்-மனைவிக்கும் சங்கு பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X