search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன்
    X
    அம்மன்

    திருமண தோஷம் நீக்கும் ஆடி செவ்வாய்

    நாகதோஷத்தால் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.
    ஆடி மாதம் வரும் செவ்வாய்க் கிழமை தோறும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்து விட்டு அம்மனை வழிபட வேண்டும். ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப்பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது. பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர். நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.
    Next Story
    ×