search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லைக்கு எளிய பரிகாரம்
    X
    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லைக்கு எளிய பரிகாரம்

    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லைக்கு எளிய பரிகாரம்

    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லை, பிறரின் பொறாமை எண்ண அதிர்வுகள் போன்றவை நம் வீட்டிலிருந்து நீங்கி, நன்மையான பலன்கள் உண்டாக எளிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லை, பிறரின் பொறாமை எண்ண அதிர்வுகள் போன்றவை நம் வீட்டிலிருந்து நீங்கி, நன்மையான பலன்கள் உண்டாக வியாழக்கிழமை தினத்தில் ஒரு தாம்பூலத் தட்டு நிறைய வெண்கடுகுகளை போட்டு “ஓம் தும் துர்க்காய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உரு ஜெபித்து கொள்ள வேண்டும்.

    பின்பு வெண்கடுகு இருக்கும் தட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு வாயிலில் நடுப்பகுதியில் “ஓம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை மூன்று முறை துதித்து சிறிது வெண்கடுகை அங்கு போட வேண்டும். இதுபோன்று வீட்டின் அக்னி மூலை, கன்னி மூலை, அக்னி மூலைக்கும், கன்னி மூலைக்கும் இடைப்பட்ட பகுதி, பிரம்மஸ்தானம், வாயு மூலை, வாயு மூலைக்கும் ஈசானிய முலைக்கும் நடுவான பகுதி, இறுதியில் ஈசானிய மூலை ஆகிய 8 இடங்களில் தட்டில் இருக்கின்ற வெண்கடுகுகளை மந்திரம் உரு ஜெபித்து போட வேண்டும்.

    வீட்டின் எட்டுப் பகுதிகளிலும் போட முடியாதவர்கள் வீட்டின் நான்கு திசைகளில் மந்திரம் துதித்து வெண்கடுகுகளை போட்டு விடலாம். இந்த எளிய பரிகாரத்தை செய்த பிறகு நமக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை மாந்திரீகம் போன்றவற்றின் பாதிப்பு உடனடியாக நீங்கும். வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பின் அவை வெளியேறும். மேலும் எத்தகைய தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழையாதவாறு தடுக்கும். சக மனிதர்களின் கண் திருஷ்டி, பொறாமை எண்ணங்களின் அதிர்வுகளால் பாதிப்புகள் ஏற்படாமல் உங்களை காக்கும்.
    Next Story
    ×