என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனித கேதரின் ஆலயத்தை பேராயர் சூசை பாக்கியம் மற்றும் ஆயர்கள் திறந்து வைத்து அர்ச்சித்த போது எடுத்த படம்.
இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலய அர்ச்சிப்பு விழா 3 ஆயர்கள் பங்கேற்பு
இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித கேதரின் ஆலயம் புதிதாக புனரமைக்கப்பட்டு அதற்கான அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்ள வந்த ஆயர்களை இரவிபுத்தன்துறை பங்கு மக்கள் மேளதாளங்களுடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா நடந்தது. அதன்படி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேராயர் சூசைபாக்கியம் தலைமையில் முதல் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மறையுரையாற்றினார். ஆலயத்துக்குள் வைக்கப்பட்டுள்ள பீடம் மற்றும் சொரூபங்கள் அர்ச்சிக்கப்பட்டன. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் வாழ்த்துரை வழங்கினார்.
இதையடுத்து ஆலயத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கு பணியாளர் இல்லம் மற்றும் ஆராதனை ஆலயம் ஆகியவை அர்ச்சிக்கப்பட்டன. தொடர்ந்து அன்பு விருந்து, ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விழாவானது இன்று தொடர்ந்து 31-ந்தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்ள வந்த ஆயர்களை இரவிபுத்தன்துறை பங்கு மக்கள் மேளதாளங்களுடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா நடந்தது. அதன்படி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேராயர் சூசைபாக்கியம் தலைமையில் முதல் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மறையுரையாற்றினார். ஆலயத்துக்குள் வைக்கப்பட்டுள்ள பீடம் மற்றும் சொரூபங்கள் அர்ச்சிக்கப்பட்டன. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் வாழ்த்துரை வழங்கினார்.
இதையடுத்து ஆலயத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கு பணியாளர் இல்லம் மற்றும் ஆராதனை ஆலயம் ஆகியவை அர்ச்சிக்கப்பட்டன. தொடர்ந்து அன்பு விருந்து, ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விழாவானது இன்று தொடர்ந்து 31-ந்தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story






