search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேளாங்கண்ணி பேராலய மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி
    X
    வேளாங்கண்ணி பேராலய மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி

    வேளாங்கண்ணி பேராலய மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி

    பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார்.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இது ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின்"லூர்து" நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்கும். இந்த பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும்சிறப்பு.

    மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம்(மே) 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார். அதை தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் உதவி பங்குதந்தைகள், அருட் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×