search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர்பவனி
    X
    புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர்பவனி

    புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர்பவனி

    புனித உபகார அன்னை ஆலய திருவிழாவில் தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது.
    காவல்கிணறு இயேசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் கொடியேற்றினார்.

    ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 8-ம் திருவிழா அன்று காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெற்றது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், மாலை 3 மணிக்கு தேர்பவனி, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் ஆரோக்கிய ராஜ், வினித்ராஜா, பங்கு மேய்ப்பு பணி குழுவினர் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×