search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் 2 நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழா
    X
    திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் 2 நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழா

    திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் 2 நாட்கள் நடைபெற்ற பாஸ்கு விழா

    143-வது பாஸ்கு விழாவை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயாளிகளை குணமடைய செய்தல் உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்துகாட்டப்பட்டன.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் 143-வது ஆண்டு பாஸ்கு விழா 2 நாட்கள் நடைபெற்றது. இடைகாட்டூர் உலகபுகழ் பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைசித்தரிக்கும் வகையில் பாஸ்கு விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு தேவாலயத்தின் முன்புள்ள அலங்கரிக்ப்பட்ட அரங்கில் “இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு” நாடகமாக நடித்துகாட்டப்பட்டது.

    முதன் முறையாக டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயாளிகளை குணமடைய செய்தல் உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்துகாட்டப்பட்டன.

    2-ம் நாள் பார்வை இல்லாவதருக்கு பார்வை வழங்குதல், இறந்த சீடரை உயிர் பித்தல், தொழு நோயாளிகளை குணமடைய செய்தல், யூத அரசு ஏசுவை கொடுமை செய்து தலையில் முள்கிரிடம் அணிவித்து சிலுவையில் அறையும் காட்சிகளையும், சிலுவையில் இருந்து உயிர்தெழும் காட்சி களையும் நடித்து காட்டினர். இந்த நாடகத்தில்100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விரதமிருந்து நடித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் செய்திருந் தது. முன்னதாக சிறப்பு திருப்பலி பூஜைகளைதிருத்தல அருட்பணியாளர் இமானுவேல் தாசன் செய்தார்.

    மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து பாஸ்கு விழாவை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.
    Next Story
    ×