என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    குளச்சல் காணிக்கை மாதா ஆலய தேர் பவனி
    X
    குளச்சல் காணிக்கை மாதா ஆலய தேர் பவனி

    குளச்சல் காணிக்கை மாதா ஆலய தேர் பவனி

    குளச்சல் காணிக்கை மாதா ஆலய 3-ம் நாள் திருவிழாவையொட்டி மெழுகுவர்த்தி பவனியும், காணிக்கை மாதா தேர் பவனியும் நடைபெற்றது.
    குளச்சல் காணிக்கை மாதா ஆலய 3-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மெழுகுவர்த்தி பவனியும், காணிக்கை மாதா தேர் பவனியும் நடைபெற்றது. இந்த பவனி குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து தொடங்கி காணிக்கை மாதா ஆலயம் சென்றடைந்தது. வழி நெடுக காணிக்கை மாதா தேர் பவனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தைகள் மற்றும் பங்கு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட நிதி நிர்வாகி அலாய்சியஸ் பென்சிகர் ஜெபம் செய்தார். அருட்பணியாளர் சசி வின்சென்ட் மறையுரையாற்றினார். இரவு 8 மணிக்கு நடந்த திருப்பலியில் எட்டாம்மடை பங்குத்தந்தை ஸ்டீபன் ஜெபம் செய்தார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றினார்.
    Next Story
    ×