என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேளாங்கண்ணி செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி
    X
    வேளாங்கண்ணி செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி

    வேளாங்கண்ணி செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி

    வேளாங்கண்ணி செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இதில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த பேராலயம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு சொந்தமானது. புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இரவு நடந்தது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி பிரார்த்தனை நடந்தது.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இதில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    ஆண்டு தோறும் செபஸ்தியார், மைக்கேல் சம்மனசு, புனித அந்தோணியார் ஆகிய 3 தேர்பவனி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செபஸ்தியார் தேர்பவனி மட்டும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க முக்குலத்தோர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×