என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
வால்பாறையில் தூய இருதய ஆலய தேர் பவனி
Byமாலை மலர்28 Jan 2022 4:04 AM GMT (Updated: 28 Jan 2022 4:04 AM GMT)
வால்பாறையில் தூய இருதய ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் தூய இருதய ஆலயத்தின் தேர்த்திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு கோவை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், பங்கு குரு மரியஜோசப் முன்னிலையிலும் கூட்டு பாடல் தேர்த் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.திருப்பலியின் தொடர்ச்சியாக தேவாலயத்தை சுற்றி புனித செபஸ்தியாரின் அம்பு நேர்ச்சிக்கடன் பவனி ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பிலும் நடைபெற்றது. பின்னர் அன்பின் விருந்தும் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பங்கு மக்களின் சார்பில் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், சமூக சேவாமையத்தின் இயக்குனர் குரு அருண் முன்னிலையிலும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தை சுற்றி தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதையடுத்து வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பங்கு மக்கள், வாழைத்தோட்டம் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பங்கு மக்களின் சார்பில் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், சமூக சேவாமையத்தின் இயக்குனர் குரு அருண் முன்னிலையிலும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தை சுற்றி தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதையடுத்து வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பங்கு மக்கள், வாழைத்தோட்டம் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X