
10-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. தேர்ப்பவனிக்கு ஊரின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ராமன்புதூர் சந்திப்பில் பங்கு நிர்வாகிகள் தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்தினம் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேர்ப்பவனி மேளதாளத்துடன் இரவு 8 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பங்குமக்கள் இணைந்து செய்திருந்தனர்.