search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அமல அன்னை
    X
    புனித அமல அன்னை

    புனித அமல அன்னை ஆலயத்தில் சனிக்கிழமைகளில் திருப்பலி நடைபெறும்

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஞாயிறு திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக சனிக்கிழமை திருப்பலிகள் நடைபெறும்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வழிபாட்டு தலங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு ஏற்ப கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாட்டு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன.

    இதுபற்றி ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஞாயிறு திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக சனிக்கிழமை மாலை 5 மணி மற்றும் மாலை 6.15 மணிக்கு திருப்பலிகள் நடைபெறும். இந்த 2 வேளைகளில் ஏதேனும் ஒரு நேரத்தில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு பங்குத்தந்தை ஜான் சேவியர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×