என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முளகுமூடு தூய மரியன்னை பேராலய திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்5 Sep 2020 4:30 AM GMT (Updated: 5 Sep 2020 4:30 AM GMT)
முளகுமூடு தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது.
அழகியமண்டபம் அருகே முளகுமூட்டில் தூய மரியன்னை பேராலயம் உள்ளது. இதை பேராலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டு முதல் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜெரோம் தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை டோமினிக் எம்.கே. தாஸ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. திருவிழா நாட்களிலும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். 9-ந் தேதி மாலையில் திருப்பலியை தொடர்ந்தும், 12-ந் தேதி இரவு 9 மணிக்கும் தேர்பவனி நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து ஆலய வளாகத்துக்குள் தேர்பவனியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை டோமினிக் எம்.கே. தாஸ், இணைபங்கு தந்தை தாமஸ், இல்ல பணியாளர்கள் ஜெலஸ்டின், ஜெரால்ட் ஜோஸ், ராபின்சன், ஆண்டனி, பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மொன்மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பேராலய பங்கு மக்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்துள்ளனர்.
விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. திருவிழா நாட்களிலும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். 9-ந் தேதி மாலையில் திருப்பலியை தொடர்ந்தும், 12-ந் தேதி இரவு 9 மணிக்கும் தேர்பவனி நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து ஆலய வளாகத்துக்குள் தேர்பவனியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை டோமினிக் எம்.கே. தாஸ், இணைபங்கு தந்தை தாமஸ், இல்ல பணியாளர்கள் ஜெலஸ்டின், ஜெரால்ட் ஜோஸ், ராபின்சன், ஆண்டனி, பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மொன்மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பேராலய பங்கு மக்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X