search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்துவ வழிபாடு
    X
    கிறிஸ்துவ வழிபாடு

    தவக்கால சிந்தனை: நான் ஏன் ஜெபிக்க வேண்டும்?

    இறைவனை தவிர்த்து எதையும் முழுமையடைய செய்ய இயலாது. எனவே இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச. 5:17) என்ற ஏசுவின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து ஜெபிப்போம்.
    ஏன் சுவாசிக்க வேண்டும்? நாம் நல்ல காற்றை உள்ளிழுத்து கெட்ட காற்றை வெளியேற்றுகிறோம். அது போல ஜெபத்தின் மூலம் கடவுளின் வல்லமையை பெற்றுக்கொண்டு நம்மிடம் இருக்கும் இயலாமைகளை, குறைபாடுகளை நீக்கி விடுகிறோம்.

    பேட்டரி ‘ரீ-சார்ஜ்’ செய்வது போல நாமும் கடவுளிடம் நமது ஆன்மிக வாழ்வை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஏசு இறை ஆட்சியை அறிவிப்பதற்கு முன் ஜெபித்தார் (லூக்5:16). முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்பும், நடைபெற்ற பின்னும் ஜெபிக்க தனிமையாக சென்றார் (மாற்6:45-46 யோவா 11:41-12).

    திரு தூதர்களை தேர்ந்தேடுக்கும் முன்பும் ஜெபித்தார் (லூக் 6:12). ஏனெனில் ஜெபிக்கும் போது தான் கடவுளின் வல்லமையை பெறுகிறோம். நீ ஜெபிப்பதை நிறுத்திவிட்டால் தண்ணீரில் இருந்து கரையில் வீசி எறியப்பட்ட மீனுக்கு ஒப்பாவாய் (புனித யோவான் கிறிஸ்தோதம்). நமது ஆண்டவர் கூறுகிறார்.

    என்னை விலக்கி விட்டு பிரிந்து எதுவும் உங்களால் செய்ய இயலாது (யோ: 15:5) ஆம் நாம் விரும்பும் எதையும் செய்யக்கூடும். ஆனால் இறைவனை தவிர்த்து எதையும் முழுமையடைய செய்ய இயலாது. எனவே இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச. 5:17) என்ற ஏசுவின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து ஜெபிப்போம்.

    அருட்தந்தை, அல்போன்ஸ், குடுந்தை.
    Next Story
    ×