என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆணிகளால் அறையப்பட்ட இயேசுவின் கைகள்
Byமாலை மலர்5 Feb 2020 3:24 AM GMT (Updated: 5 Feb 2020 3:24 AM GMT)
எந்த குற்றத்தையும் செய்யாத இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக்கொடுத்தார். அப்படி இயேசுவை சிலுவையில் அறைந்த போது அவருடைய கைகள் மற்றும் கால்கள் ஆணிகளால் அறையப்பட்டது.
ரோமநாட்டின் சட்டத்தின்படி கொடிய குற்றத்தை செய்தவர்கள் சிலுவையில் அடித்து கொல்லப்படுவர். ஆனால் எந்த குற்றத்தையும் செய்யாத இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக்கொடுத்தார். அப்படி இயேசுவை சிலுவையில் அறைந்த போது அவருடைய கைகள் மற்றும் கால்கள் ஆணிகளால் அறையப்பட்டது.
இப்படி ஆணிகளால் அறையப்பட்ட இயேவின் கைகள் மற்றும் கால்களை குறித்து நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.
இயேசுவானவர் குஷ்டரோகிகளை தன் கைகளால் தொட்டு சுகப்படுத்தினார், பசியோடிருந்த 5 ஆயிரம் பேரை போஷித்த கரங்கள் இப்படி அநேக நன்மைகளை செய்த கரங்கள் ஆணிகளால் அறையப்பட்டது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இயேசுவின் கால்களை குறித்து பார்த்தால் கடல் மேல் நடந்த கால்கள், ஒரு தேசத்தில் இருந்து மற்றொரு தேசத்திற்கு செல்ல மக்களை அழைத்துக்கொண்டு கடலை இரண்டாக பிரித்து கடலின் நடுவே நடந்து சென்றனர் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.
இப்படி இயேசுவின் கைகள் மற்றும் கால்களில் ஆணிகளை பாய்த்து சிலுவையில் அறைந்தனர். அந்த நாட்களில் உலகில் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய மொழிகளான கிரேக்க, லத்தீன், எபிரேயு எழுத்துக்களில் இவர் யூதருடைய ராஜா என்று எழுதி அந்த சிலுவைக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எதற்காக என்றால் நமக்காகத்தான் என்று நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்படி இயேசு ஒரு குற்றமும் செய்யாமல் நமக்காக அவருடைய ரத்தம் கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்டது உண்மையானால், நாம் இப்போது இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று நாம் இப்போதே சிந்தித்து பார்ப்போம்.
எனவே, நாங்கள் செய்த தவறுகளுக்காக அன்றே சிலுவை பாடுகளை அனுபவித்தீரே என்று நாம் ஒவ்வொருவரும் இந்த தவக்காலத்தை நினைவு கூர்ந்து இப்போதே இந்த உலகத்தை வெறுத்து இயேசுவின் பிள்ளைகளாய் வாழ நம் வாழ்க்கையை இன்றே ஒப்புக்கொடுப்போம் ஆமென்.
சகோ.டாக்டர்.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.
இப்படி ஆணிகளால் அறையப்பட்ட இயேவின் கைகள் மற்றும் கால்களை குறித்து நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.
இயேசுவானவர் குஷ்டரோகிகளை தன் கைகளால் தொட்டு சுகப்படுத்தினார், பசியோடிருந்த 5 ஆயிரம் பேரை போஷித்த கரங்கள் இப்படி அநேக நன்மைகளை செய்த கரங்கள் ஆணிகளால் அறையப்பட்டது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இயேசுவின் கால்களை குறித்து பார்த்தால் கடல் மேல் நடந்த கால்கள், ஒரு தேசத்தில் இருந்து மற்றொரு தேசத்திற்கு செல்ல மக்களை அழைத்துக்கொண்டு கடலை இரண்டாக பிரித்து கடலின் நடுவே நடந்து சென்றனர் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.
இப்படி இயேசுவின் கைகள் மற்றும் கால்களில் ஆணிகளை பாய்த்து சிலுவையில் அறைந்தனர். அந்த நாட்களில் உலகில் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய மொழிகளான கிரேக்க, லத்தீன், எபிரேயு எழுத்துக்களில் இவர் யூதருடைய ராஜா என்று எழுதி அந்த சிலுவைக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எதற்காக என்றால் நமக்காகத்தான் என்று நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்படி இயேசு ஒரு குற்றமும் செய்யாமல் நமக்காக அவருடைய ரத்தம் கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்டது உண்மையானால், நாம் இப்போது இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று நாம் இப்போதே சிந்தித்து பார்ப்போம்.
எனவே, நாங்கள் செய்த தவறுகளுக்காக அன்றே சிலுவை பாடுகளை அனுபவித்தீரே என்று நாம் ஒவ்வொருவரும் இந்த தவக்காலத்தை நினைவு கூர்ந்து இப்போதே இந்த உலகத்தை வெறுத்து இயேசுவின் பிள்ளைகளாய் வாழ நம் வாழ்க்கையை இன்றே ஒப்புக்கொடுப்போம் ஆமென்.
சகோ.டாக்டர்.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X