என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Byமாலை மலர்1 Jan 2020 4:42 AM GMT (Updated: 1 Jan 2020 4:42 AM GMT)
ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி கடலூரில் தூய எபிபெனி தேவாலயத்தில் அருட்தந்தை அருண் ஜெபஸ் தலைமையில் நேற்று இரவு 11.30 மணிக்கு பழைய வருட ஆராதனை நடந்தது.
பின்னர் 12 மணிக்கு ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு, புதிய வருட ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சொரக்கால்பட்டு அந்தோணியார் ஆலயம், திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நள்ளிரவு 12 மணி ஆனதும் 2020-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
பின்னர் 12 மணிக்கு ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு, புதிய வருட ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சொரக்கால்பட்டு அந்தோணியார் ஆலயம், திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நள்ளிரவு 12 மணி ஆனதும் 2020-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X