search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம்

    மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
    பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

    நாம் வாழும் வீடுகளில் சில வீடுகள் பகல் நேரத்திலும் கூட இருளாய் காணப்படும். அப்படி இருக்கும் போது நம்முடைய வீட்டுக்கு யாராவது வந்தால் இப்படி வீடு இருளடைந்து காணப்படுகிறதே? என்று கேட்பார்கள். ஜன்னலை திறந்து வையுங்கள், விளக்கை போடுங்கள். அப்போதுதான் வெளிச்சம் (ஒளி) வரும் என்று கூறுவார்கள்.

    அநேகருடைய வீடுகளில் கரப்பான் பூச்சி, கொசு மற்றும் பல்வேறு பூச்சிகள் இருப்பதை காண முடியும். இந்த பூச்சிகள் நாம் இரவு நேரத்தில் விளக்கை போட்டவுடன் அந்த வெளிச்சத்தை பார்த்து ஓடி மறைந்து விடும். ஏனென்றால் அவற்றுக்கு இருள்தான் சாதகமாக உள்ளது.

    ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல, நம்முடைய வாழ்க்கையில் ஒளி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த உலகத்தில் நமக்கு அலுவலகங்களிலும் சரி, வீடுகளிலும் சரி விளக்கின் ஒளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருளில் இருக்க நம்முடைய மனம் இடம் கொடுப்பதில்லை.

    இந்த உலகத்தில் பகல், இரவு என்று படைத்த தேவன் என்ன சொல்லுகிறார் என்றால், நீங்கள் எத்தனை விளக்குகள் போட்டாலும் இரவு பகலாக மாறலாம். ஆனால் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை செய்துகொண்டு உலகப்பிரகாரமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களின் இருதயம் இருளாகவே உள்ளது. இந்த இருளை எப்படி போக்கபோகிறீர்கள்? என்று கேட்கிறார்.

    வேதாகமத்தில் யோவான் 8-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன், ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவபிள்ளைகளே இப்படி நாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருத யத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம். இந்த தவக்காலத் தில் இயேசுவின் சிலுவை பாடுகள் குறித்து தியானித்து வரும் நாம், வேத வசனங்களை தியானித்து, தேவனுக்காக நம்முடைய இருதயத்தின் கதவுகளை திறப்போம். அப்படி நாம் செய்யும் போது நம் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் நிச்சயமாக ஜீவ ஒளியை பிரகாசிக்கப்பண்ணுவார். ஆமென்.

    சகோ.சாம்ராஜ், ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
    Next Story
    ×