search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    சிறுதோல்விகள்

    சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்(யாத் 6:12)

    பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மேல் போர்த்தொடுக்கப்போகும் பெரிய படைக்கும் தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக எலி ஒன்று குறுக்கிடவே வானை எடுத்துக்கொண்டு அதனை வெட்டிம்படி துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசம், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெறபோகிறேன் என்று நினைத்து யுத்தத்துக்கு போகாமல் பின்வாங்கிக்போனான்.

    சில நேரங்களில் இந்த புத்தி இழந்த இளவரசனைப் போல நாமும் சிறுசிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய் நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றோம். இஸ்ரவேல் மக்களைவிடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு துவக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக் கவில்லை. எனவே சோர்ந்து போன அவன் இவர்களே எனக்கு செவி கொடுக்காத போது எகிப்தின் ராஜா எனக்கு எப்படி செவிகொடுப்பான என்ற தயங்கி நின்றான்.
    ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கி போக வைத்தார்.

    நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்று போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமையாளர்களாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்த திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்ன காரியங்களைல் சாதாரண உலக மனிதன் அடையும் வெற்றியை கூடி அடைய முடியாமல் தோல்வி அடைய தருணங்கள் உண்டு. இருப்பினும் இந்த சிறிய தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்து விட முடியாது.

    ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய போதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்த போது போதுரு அதை விட மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.

    சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சங்களுக்கு முன்னால் நின்று பவுலைப்போல தைரியமாக பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    - சாம்சன் பால்.
    Next Story
    ×