
கொடி ஊர்வலம் ஜெபமாலை பாடல்களுடன் கோவிலை சுற்றி வந்து கொடிமேடையை அடைந்தது. இதை தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி, கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். பின்னர் மரியா-எளிய வாழ்வால் ஏற்றம் பெற்றவர் என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குதந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தையர்கள் அருளானந்தம், இருதயம், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும். 14-ந்தேதி தேர்பவனியும், 15-ந் தேதி சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.