என் மலர்
ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று போற்றப்படும் இ்ந்த பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று போற்றப்படும் இ்ந்த பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சென்ற ஆண்டு குருத்தோலை ஞாயிறில் எடுத்து சென்ற குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து எடுத்த சாம்பலை புனிதம் செய்து நெற்றியில் பூசும் நிகழ்வே சாம்பல் புதன் ஆகும். இதையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜேம்ஸ், ஜேயன், அருட்தந்தையர்கள் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். அதேபோல கோட்டரப்பட்டி, பூதலூர், மைக்கேல்பட்டி, மணத்திடல், முத்தாண்டிபட்டி பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சென்ற ஆண்டு குருத்தோலை ஞாயிறில் எடுத்து சென்ற குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து எடுத்த சாம்பலை புனிதம் செய்து நெற்றியில் பூசும் நிகழ்வே சாம்பல் புதன் ஆகும். இதையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜேம்ஸ், ஜேயன், அருட்தந்தையர்கள் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். அதேபோல கோட்டரப்பட்டி, பூதலூர், மைக்கேல்பட்டி, மணத்திடல், முத்தாண்டிபட்டி பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Next Story






