என் மலர்
ஆன்மிகம்

அநீதிக்கு எதிரான கோபம்
எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.
கோபம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அது வராமல் காக்க வேண்டும். மனிதனிடம் என்னென்ன குணங்கள் உண்டோ அவையெல்லாம் இயற்கையானவை. மனிதனுக்கு தேவை என்பதால் தான் இறைவன் அந்த குணங்களை படைத்திருக்கிறான். அந்த குணங்களுள் ஒன்று கோபம். கோபம் கொள்ளாத மனிதன் இருக்க முடியாது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. மனிதர்கள் கோபப் படுகிறார்கள் சரி. இயேசுவே விவிலியத்தில் கடுமையாக கோபத்தை வெளி படுத்துகிறார் (யோவான் 2:13-25). என் தந்தையின் இல்லத்தை, கோவிலை வணிக கூடாரமாக்காதீர்கள் என கோபம் கொண்டு அடித்து விரட்டுகிறார். ஆலயம் என்பது காசு பார்க்கும் இடமல்ல. அது இறைவேண்டலின் வீடு என்று சீறுகிறார். இது கோபத்தை தாண்டிய அறச்சீற்றம் என்கிறார்.
ஒருவனுக்கு கோபமே வராது என்றால் அவனுக்கு எதுவுமே வராது. அன்பு கொண்ட மனம் தான் கோபம் கொள்ளும். கோபம் கொண்ட மனம் தான் அன்பு கொள்ளும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.
- வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை.
ஒருவனுக்கு கோபமே வராது என்றால் அவனுக்கு எதுவுமே வராது. அன்பு கொண்ட மனம் தான் கோபம் கொள்ளும். கோபம் கொண்ட மனம் தான் அன்பு கொள்ளும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.
- வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை.
Next Story






