என் மலர்
ஆன்மிகம்

புனித காணிக்கை அன்னை திருத்தல குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
புனித காணிக்கை அன்னை திருத்தல குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல 418-வது குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல 418-வது குடும்ப விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
முதல் நாள் திருவிழாவையொட்டி காலை 7 மணிக்கு இறைவனடி சேர்ந்தவர்களுக்கான திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள், நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் 2-ம் நாள் முதல் 7-ம் நாள் வரை தினமும் மாலை ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
3-ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் குருக்கள் இல்லம் அருட்பணியாளர் செல்வராஜ் தலைமையில் கோட்டார் மறை வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சல் மறையுரை ஆற்றுகிறார். ஓய்வு பெற்ற ஆயர் ரெமிஜியுஸ் தலைமையில் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது.
8-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு திருப்பலி, 9 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இருந்து மெழுகுவர்த்தி பவனியுடன் புனித காணிக்கை அன்னையின் திருவுருவப்பவனி தொடங்குகிறது. இந்த பவனி காமராஜ் பஸ் நிறுத்தம், காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு வழியாக புனித காணிக்கை அன்னை ஆலயம் சென்றடைகிறது.
9-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு நோயாளிகளின் சிறப்பு திருப்பலி, 10 மணிக்கு திருமுழுக்கு அருளடையாளம், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், ஆராதனை நடக்கிறது. நிறைவு விழாவன்று காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் பிஷப் ரெமிஜியுஸ் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூட தாளாளர் ஸ்டான்லி மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நிகழ்ச்சியுடன் குடும்ப விழா நிறைவடைகிறது.
Next Story






