என் மலர்
ஆன்மிகம்

நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது
நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழாவுக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் மறையுரையாற்றுகிறார். ஆறுகாணி திருக்குடும்ப ஆலய வட்டார முதன்மை பணியாளர் டோபின் ஆலப்புரைக்கல், புனித அல்போன்சாவின் சிறப்பு நவநாள் வழிபாட்டை தலைமையேற்று நடத்துகிறார்.
22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நித்திரவிளை ஜெயமாதா ஆலய பங்குத்தந்தை குரியன் பந்திச்சிறைக்கல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார்.
23-ந் தேதி காலை 7.30 மணிக்கு முக்கூட்டுக்கல் புனித மேரி இளங்குருத்துவ கல்லூரி அதிபர் ஜஸ்டின் செறுவேலின் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை பெனடிக் அனலின் மறையுரையாற்றுகிறார்.
28-ந் தேதி புனித அல்போன்சாவின் நினைவு நாள். காலை 9 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. தக்கலை மறைமாவட்ட பொருளாளர் டென்சி முண்டுநடைக்கல் திருப்பலி நடத்துகிறார். 2016-17-ம் கல்வி ஆண்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள். விழாவில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்து கொள்கிறார். மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
29-ந் தேதி இரவு 8 மணிக்கு திவ்ய நற்கருணை ஆராதனையும், திருப்பவனியும் நடக்கிறது.
30-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் தேர்ப்பவனி நடக்கிறது. தொடர்ந்து நேர்ச்சை விருந்து நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் பவ்வத்துப்பறம்பில், துணை பங்குத்தந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழாவுக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் மறையுரையாற்றுகிறார். ஆறுகாணி திருக்குடும்ப ஆலய வட்டார முதன்மை பணியாளர் டோபின் ஆலப்புரைக்கல், புனித அல்போன்சாவின் சிறப்பு நவநாள் வழிபாட்டை தலைமையேற்று நடத்துகிறார்.
22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நித்திரவிளை ஜெயமாதா ஆலய பங்குத்தந்தை குரியன் பந்திச்சிறைக்கல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார்.
23-ந் தேதி காலை 7.30 மணிக்கு முக்கூட்டுக்கல் புனித மேரி இளங்குருத்துவ கல்லூரி அதிபர் ஜஸ்டின் செறுவேலின் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை பெனடிக் அனலின் மறையுரையாற்றுகிறார்.
28-ந் தேதி புனித அல்போன்சாவின் நினைவு நாள். காலை 9 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. தக்கலை மறைமாவட்ட பொருளாளர் டென்சி முண்டுநடைக்கல் திருப்பலி நடத்துகிறார். 2016-17-ம் கல்வி ஆண்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள். விழாவில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்து கொள்கிறார். மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
29-ந் தேதி இரவு 8 மணிக்கு திவ்ய நற்கருணை ஆராதனையும், திருப்பவனியும் நடக்கிறது.
30-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் தேர்ப்பவனி நடக்கிறது. தொடர்ந்து நேர்ச்சை விருந்து நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் பவ்வத்துப்பறம்பில், துணை பங்குத்தந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story






