search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    குமரி மாவட்டத்தில் ராஜாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் ராஜாவூரில் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை துணை தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோ, பங்கு பேரவையினர், பங்கு தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்கு தந்தை ஆன்றனி ரோசாரியோ ஆகியோர் செய்துள்ளனர்.
    Next Story
    ×