search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஆலங்குடி அருகே புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
    X
    ஆலங்குடி அருகே புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

    ஆலங்குடி அருகே புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

    ஆலங்குடி அருகே உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் காலை 7 மணிக்கு தேர்பவனி மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    இதையடுத்து இன்று இரவு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் செபஸ்தியாரின் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி, பவனி பூஜை ராசியமங்கலம் பங்குத்தந்தை அருட்திரு கறம்பை செபஸ்தியான் தலைமையில், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் அனைவரின்  கூட்டுப்பாடல் பூஜையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து ஆலயத்தை வந்தடைந்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராசியமங்கலத்தில் உள்ள பங்கு அருள் பணியாளர், கிராம கமிட்டி ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×