search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா ஆலய தேர் பவனி
    X
    வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா ஆலய தேர் பவனி

    வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா ஆலய தேர் பவனி

    வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று நடந்தது. முன்னதாக காலை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து மாலை கடலூர்-புதுச்சேரி மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த தேர்பவனி, கணுவாப்பேட்டை சாலை, மார்க்கெட் வீதி வழியாக மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையில் பலர் செய்திருந்தனர்.
    Next Story
    ×