search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தேவசகாயம்
    X
    தேவசகாயம்

    தேவசகாயம் மவுண்ட் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாக நிகழ்ச்சி

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் இன்று (வியாழக்கிழமை) திருப்பலி நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியாக நடத்தப்படும். அதன்படி நேற்று நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, புகழ்மாலை நடந்தது. அதன் பின்னர் உயிர்த்தியாகச் சுடர் அர்ப்பணம் மறைசாட்சியின் திருக்கொடி ஏற்றம் மற்றும் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு தலைமை மற்றும் மறையுரை ஆற்றினார்

    இன்று (வியாழக்கிழமை) காலையில் திருப்பலி நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நன்றி திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு தலைமை மற்றும் மறையுரை ஆற்றுகிறார். விழா ஏற்பாடுகளை அதிபர், பங்குதந்தைகள், பங்கு அருட்பணி பேரவையினர், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×