
வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை திருநாள் நடக்கிறது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 1- ந்தேதி (வியாழக்கிழமை) மாலை பாதம் கழுவும் வழிபாடு, நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை வழிபாடு நடக்கிறது.
2- ந்தேதி புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. பகல் 11 மணிக்கு ஏசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. மாலையில் திருச்சிலுவை ஆராதனை நடக்கிறது. 3-ந்தேதி இரவு 10.30 மணிக்கு பாஸ்கா விழா மற்றும் அதை தொடர்ந்து ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிருடன் எழுந்த, உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.