என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய தேர்பவனி
Byமாலை மலர்19 Feb 2020 3:32 AM GMT (Updated: 19 Feb 2020 3:32 AM GMT)
காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்பவனி விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை வேளையில் கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னேஸ் அம்மாள் சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த பவனியானது கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று, மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் இருதயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னேஸ் அம்மாள் சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த பவனியானது கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று, மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் இருதயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X