search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி
    X

    ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி

    ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி நடைபெற்றது. அப்போது ஆலயத்தில் இருந்து மாதா, சூசையப்பர், இயேசு மற்றும் புனித ஜெர்மேனம்மாள் எழுந்தருளிய தேர்களை இழுத்து கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி பவனி வந்தனர்.
    சோழவந்தானை அடுத்து ராயபுரத்தில் பழமை வாய்ந்த புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஜெர்மேனம்மாள் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலி நடந்து வந்தது.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. அப்போது ஆலயத்தில் இருந்து மாதா, சூசையப்பர், இயேசு மற்றும் புனித ஜெர்மேனம்மாள் எழுந்தருளிய தேர்களை இழுத்து கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி பவனி வந்தனர். வாணவேடிக்கையும், தாரை தப்பட்டையுடன் கிராமத்தில் தேர்கள் வலம் வந்து, அதிகாலை மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தது. இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு சபை குடும்பம் மற்றும் பங்கு இறைமக்கள், கிராமமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×