என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
Byமாலை மலர்2 May 2019 3:50 AM GMT (Updated: 2 May 2019 3:50 AM GMT)
காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த புனித ஆக்னேஷ் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனையும், கூட்டு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்ததும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. கோட்டைமேடு ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனியானது கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
இதில் கோட்டைமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனையும், கூட்டு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்ததும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. கோட்டைமேடு ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனியானது கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
இதில் கோட்டைமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X