என் மலர்
ஆன்மிகம்

அடைக்கல மாதா ஆலய தேர் பவனி
திருச்சி பொன்மலைப்பட்டியில் பழமை வாய்ந்த அடைக்கல மாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி சிறப்பாக நடந்தது.
திருச்சி பொன்மலைப்பட்டியில் பழமை வாய்ந்த அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மறையுரை, ஜெபம், மாதா மன்றாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் நடந்தது. தேர் பவனியை பங்கு தந்தை சின்னப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அடைக்கல மாதா, சூசையப்பர், காவல் சம்மனசு ஆகிய 3 தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தன.
இரவு 11.30 மணி அளவில் தொடங்கிய தேர் பவனி அதிகாலை 5 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. அதன் பிறகு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொண்டு அடைக்கல மாதாவை வழிபட்டனர். திருவிழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் நடந்தது. தேர் பவனியை பங்கு தந்தை சின்னப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அடைக்கல மாதா, சூசையப்பர், காவல் சம்மனசு ஆகிய 3 தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தன.
இரவு 11.30 மணி அளவில் தொடங்கிய தேர் பவனி அதிகாலை 5 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. அதன் பிறகு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொண்டு அடைக்கல மாதாவை வழிபட்டனர். திருவிழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
Next Story






