என் மலர்
ஆன்மிகம்

புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய கப்பல் சப்பர பவனி நடந்தபோது எடுத்த படம்.
புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய கப்பல் சப்பர பவனி
புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய கப்பல் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஜீவாநகர் பங்குதந்தை சகேஷ் அடிகளார் தலைமையில் மாலையில் ஆராதனை நடந்தது. பின்னர் புனித சவேரியார் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட கப்பல் சப்பரத்தில் வைத்து பவனி நடந்தது.
நேற்று காலையில், அடைக்கலாபுரம் பங்குதந்தை ஜோசப் இசிதோர் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.
அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கப்பல் சப்பரத்தில் புனித சவேரியார் சொரூபம் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனி சென்று, பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






