என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சலேத் அன்னை ஆலய பெருவிழா: மின் அலங்கார பவனி
    X

    சலேத் அன்னை ஆலய பெருவிழா: மின் அலங்கார பவனி

    கொடைக்கானல் நகரில் தூய சலேத் அன்னை ஆலய பெருவிழாயொட்டி நேற்று சிறப்பு திருப்பலியும், தேசிய கொடியேற்றமும் நடைபெற்றது.
    கொடைக்கானல் நகரில் தூய சலேத் அன்னை ஆலய பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் பெருவிழா திருப்பலியை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி வழங்கினார்.

     இதில் வட்டார அதிபர் ஜெரோம் ஏரோனி மூஸ், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், கோவிந்தன், முகமதுஇபுராகிம், எட்வர்டு, உதவி பங்குத்தந்தையர்கள் சாமுவேல், பிரவீன் உட்பட பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதனைதொடர்ந்து கொட்டும் மழையில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி, ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை அடைந்தது. இதனையொட்டி நேற்று காலை சிறப்பு திருப்பலியும், தேசிய கொடியேற்றமும் நடைபெற்றது. முதல் நற்கருணைப் பெருவிழாவினை இஞ்ஞாசி அற்புதராஜ் நிகழ்த்தினார்.

    அதனை தொடர்ந்து மாலையில் பகல் சப்பர பவனி திருஇருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை ஆலயத்தினை அடைந்தது. பின்னர் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் பங்கு தந்தையர்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    இதனையொட்டி பல்வேறு தரப்பினரின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×