என் மலர்
ஆன்மிகம்

பாலகிருஷ்ணம்பட்டி புனித செபஸ்தியார் ஆலய புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
உப்பிலியபுரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணம்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உப்பிலியபுரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணம்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டப்பாளையம் பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார் புனித செபஸ்தியார் திருஉருவம் பொறித்த கொடியை புனிதம் செய்து ஏற்றிவைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து முதல் திருப்பலி நடைபெற்றது. வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும், 9-ந் தேதி மாலை 6 மணிக்கு தாத்தையங்கார்பேட்டை பங்குத்தந்தை செபாஸ்டின் திருப்பலி நடத்தி மறையுரையாற்றுகிறார். அன்று இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
10-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலியை சிலுவைகிரி பங்குத்தந்தை கிருபாகரன் நடத்தி மறையுரை வழங்குகிறார். அன்று மாலை 3 மணிக்கு சப்பர பவனி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை வின்சென்ட் மற்றும் அருட்கன்னியர்கள், பாலகிருஷ்ணம்பட்டி கிராம மக்கள், ஏசு இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து முதல் திருப்பலி நடைபெற்றது. வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும், 9-ந் தேதி மாலை 6 மணிக்கு தாத்தையங்கார்பேட்டை பங்குத்தந்தை செபாஸ்டின் திருப்பலி நடத்தி மறையுரையாற்றுகிறார். அன்று இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
10-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலியை சிலுவைகிரி பங்குத்தந்தை கிருபாகரன் நடத்தி மறையுரை வழங்குகிறார். அன்று மாலை 3 மணிக்கு சப்பர பவனி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை வின்சென்ட் மற்றும் அருட்கன்னியர்கள், பாலகிருஷ்ணம்பட்டி கிராம மக்கள், ஏசு இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story






