என் மலர்
கிறித்தவம்
நமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார்.
ஆயுட்காலம் நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. அதற்கேற்ற வகையில் உடல், சுற்றுச்சூழலை போன்றவற்றை மனிதன் பராமரித்துக் கொண்டிருக்கிறான். இதற்காக பல்வேறு பயிற்சிகள், உணவுப்பழக்க வழக் கங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பழக்கங்கள் மூலம் அதிக வயது வாழ்ந்தவர்களை முன்னுதாரணமாக வைத்துக்கொள்கின்றனர்.
நீண்ட நாட்கள் வாழ்வதற்கு எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு அளவுக்கு பலனை அளித் தாலும், ஆயுள்காலம் என்பது இறைவனின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிருப் பதும், ஒரு இளைஞன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறப்பதும், ஆயுள் விஷயத்தில் இறைவனின் செயல்பாட்டை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றன.
ஆனால் காரணமில்லாமல் இறைவனால் ஒருவரது ஆயுள்காலம் குறைக்கப்படுவதும், கூட்டப்படுவதும் இல்லை. அந்தக் காரணத்தை உணர்ந்தறியும் ஞானம் இல்லாததால் மனிதன் தனக்கு தோன்றிய அறிவின்படி ஆயுளைப்பற்றிய கருத்தை ஏதோ ஒரு கணிப்பில் கூறுகிறான். இறைவனின் சித்தம் இல்லாமல், எந்தப் பயிற்சியின் மூலமாகவும் ஆயுள்காலத்தை யாருமே நீட்டித்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் நிஜம்.
‘மகாஅயோக்கியனாய் இருக்கிறான், நல்ல ஆயுட்காலத்தை அவன் அடைந்திருக்கிறானே’ என்று சிலரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘அயோக் கியனாக மனிதர்களால் கருதப்படுகிறவர்க ளுக்கும் இறைவனின் கருணை உண்டு’ (சங்.25:8).
அப்படிப்பட்ட நபர்களால் வேறு சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்காகவோ அல்லது முன்பு செய்திருந்த பாவங்களுக்கான பிரதிபலனை அவனது பிள்ளைகள் அனுபவிப்பதை பார்ப்பதற்காகவோ அல்லது ஏற்கனவே செய்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்திகளை செய்வதற்காகவோ அல்லது மனந்திரும்பி இறைப்பாதையை நோக்கி வருவதற்கான வாய்ப்பாகவோ, அவர்களின் ஆயுளை இறைவன் நீட்டிக்கச் செய்திருக்கலாம். காலங்கள்தான் அதை நமக்கு வெளிப்படுத்தும்.
ஆயுள்காலத்தில் அளவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த நாட்களை எப்படி அனுபவித்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நல்ல அம்சங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் நியாயமான முறையில் அவற்றை அனுபவிக்கும் தகுதியை நமக்கு இறைவன் அளித்திருக்கிறாரா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தகுதி இல்லை என்றால், ஏன் அதை இழந்துவிட்டோம்? எதனால் அதற்குத் தடை வந்தது? என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா? மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா? என்பதை அறிய முற்படுவது அவசியம்.
ஏனென்றால், நாம் மேலும் பாவங்களை செய்யாமல் இருப்பதற்கும், செய்த பாவங்களுக்கான நிவர்த்திகளை செய்து இறைவனின் வழிக்குள் வருவதற்கும் இந்த சுய ஆராய்ச்சிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. மேலும், பாவங்களினால் வந்த சாபங்களில் இருந்து நீங்குவதோடு, வாரிசுகளின் வாழ்க்கையில் பல்வேறு சாப இடற்பாடுகள் வருவதையும் தவிர்க்க உதவுகின்றன.
ஆயுள்காலத்தின் அடிப்படை பற்றி வேதம் ஒரு விளக்கத்தை அளிக்கிறது (யோபு 11:13-17). 14-ம் வசனம், ‘உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்’ என்று போதிக்கிறது. ஆயுசு காலங்கள் பட்டப்பகலைப் போல பிரகாசிப்பதற்கு இது காரணமாக உள்ளது என்பதை அந்த வசனம் மூலம் இறைவன் வலியுறுத்துகிறார்.
ஆயுட்காலம் பிரகாசிக்காமல் போவதற்கு இரண்டு அம்சங்களை அந்த வசனத்தில் இறைவன் சுட்டிக்காட்டுகிறார். முதலாவது, நமது கையினால் செய்யப்படும் அக்கிரமங்கள் அல்லது பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுவது, அப்படிப்பட்ட அக்கிரமங்களால் வீட்டுக்குள் நுழைந்து கொண்ட அநியாயங்கள் அல்லது நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்பாடுகள் ஆகிய வையே.
ஒரு குடும்பத்தில் ஒருவர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை அடையாமல் போவது, கொலை, கொள்ளை, விபசாரம் போன்றவை அந்தக் குடும்பத்தில் நடப்பது ஆகியவையெல்லாம், யாருக்கோ எங்கேயோ ஏற்கனவே செய்யப்பட்ட அநியாயங்களின் நுழைவுதானே தவிர வேறல்ல.
தகுதியுள்ள ஒருவருக்கு உதவி செய்யாமல் போனதினால் அவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும், உதவி செய்யாதவன் வீட்டுக்குள் அநியாயங்களாக நுழையும் என்பது நிஜம். பணமிருந்தும் சமாதானமில்லாத குடும்பங்கள் பல உள்ளன. இவர்களெல்லாம் அநியாயத்தை வரவழைத்துக் கொண்டவர்கள்.
இதுபோன்ற அநியாயங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது எப்படி? இதற்கு வேதம் மட்டுமே வழிகாட்டியாய் உள்ளது. மூதாதையர் செய்த பாவங்களில் ஒருசிலவற்றை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். மற்றவர்களின் சொத்துகள், பொருட்கள் எதுவும் மூதாதைகள் மூலம் அநியாயமாய் நம்மிடம் வந்திருந்தால் அதை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம்.
இதுபற்றி இயேசுவும் நேரடியாகவே போதித்துள்ளார். அவர், ‘நீ பலி பீடத்தினிடத்தில் (ஆலயத்தில்) உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ என்று கூறியிருக்கிறார் (மத்.5:23,24).
நமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார். இல்லாவிட்டால், எல்லாம் இருந்தும் திருப்தியற்றே வாழ்க்கை முடியும்.
அநியாய பொருட்களை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால் சரீர ரீதியான கள்ள உறவுகளை எப்படி நிவர்த்தி செய்வது? அதுபற்றி இறைவனிடம் மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையிடமும், கள்ள உறவில் இணைந்தவரின் வாழ்க்கைத் துணையிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும். எனவே அநியாயங்களை செய்து அநியாயங்களுக்கு பலியாக வேண்டாம்.
நீண்ட நாட்கள் வாழ்வதற்கு எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு அளவுக்கு பலனை அளித் தாலும், ஆயுள்காலம் என்பது இறைவனின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிருப் பதும், ஒரு இளைஞன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறப்பதும், ஆயுள் விஷயத்தில் இறைவனின் செயல்பாட்டை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றன.
ஆனால் காரணமில்லாமல் இறைவனால் ஒருவரது ஆயுள்காலம் குறைக்கப்படுவதும், கூட்டப்படுவதும் இல்லை. அந்தக் காரணத்தை உணர்ந்தறியும் ஞானம் இல்லாததால் மனிதன் தனக்கு தோன்றிய அறிவின்படி ஆயுளைப்பற்றிய கருத்தை ஏதோ ஒரு கணிப்பில் கூறுகிறான். இறைவனின் சித்தம் இல்லாமல், எந்தப் பயிற்சியின் மூலமாகவும் ஆயுள்காலத்தை யாருமே நீட்டித்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் நிஜம்.
‘மகாஅயோக்கியனாய் இருக்கிறான், நல்ல ஆயுட்காலத்தை அவன் அடைந்திருக்கிறானே’ என்று சிலரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘அயோக் கியனாக மனிதர்களால் கருதப்படுகிறவர்க ளுக்கும் இறைவனின் கருணை உண்டு’ (சங்.25:8).
அப்படிப்பட்ட நபர்களால் வேறு சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்காகவோ அல்லது முன்பு செய்திருந்த பாவங்களுக்கான பிரதிபலனை அவனது பிள்ளைகள் அனுபவிப்பதை பார்ப்பதற்காகவோ அல்லது ஏற்கனவே செய்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்திகளை செய்வதற்காகவோ அல்லது மனந்திரும்பி இறைப்பாதையை நோக்கி வருவதற்கான வாய்ப்பாகவோ, அவர்களின் ஆயுளை இறைவன் நீட்டிக்கச் செய்திருக்கலாம். காலங்கள்தான் அதை நமக்கு வெளிப்படுத்தும்.
ஆயுள்காலத்தில் அளவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த நாட்களை எப்படி அனுபவித்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நல்ல அம்சங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் நியாயமான முறையில் அவற்றை அனுபவிக்கும் தகுதியை நமக்கு இறைவன் அளித்திருக்கிறாரா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தகுதி இல்லை என்றால், ஏன் அதை இழந்துவிட்டோம்? எதனால் அதற்குத் தடை வந்தது? என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா? மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா? என்பதை அறிய முற்படுவது அவசியம்.
ஏனென்றால், நாம் மேலும் பாவங்களை செய்யாமல் இருப்பதற்கும், செய்த பாவங்களுக்கான நிவர்த்திகளை செய்து இறைவனின் வழிக்குள் வருவதற்கும் இந்த சுய ஆராய்ச்சிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. மேலும், பாவங்களினால் வந்த சாபங்களில் இருந்து நீங்குவதோடு, வாரிசுகளின் வாழ்க்கையில் பல்வேறு சாப இடற்பாடுகள் வருவதையும் தவிர்க்க உதவுகின்றன.
ஆயுள்காலத்தின் அடிப்படை பற்றி வேதம் ஒரு விளக்கத்தை அளிக்கிறது (யோபு 11:13-17). 14-ம் வசனம், ‘உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்’ என்று போதிக்கிறது. ஆயுசு காலங்கள் பட்டப்பகலைப் போல பிரகாசிப்பதற்கு இது காரணமாக உள்ளது என்பதை அந்த வசனம் மூலம் இறைவன் வலியுறுத்துகிறார்.
ஆயுட்காலம் பிரகாசிக்காமல் போவதற்கு இரண்டு அம்சங்களை அந்த வசனத்தில் இறைவன் சுட்டிக்காட்டுகிறார். முதலாவது, நமது கையினால் செய்யப்படும் அக்கிரமங்கள் அல்லது பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுவது, அப்படிப்பட்ட அக்கிரமங்களால் வீட்டுக்குள் நுழைந்து கொண்ட அநியாயங்கள் அல்லது நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்பாடுகள் ஆகிய வையே.
ஒரு குடும்பத்தில் ஒருவர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை அடையாமல் போவது, கொலை, கொள்ளை, விபசாரம் போன்றவை அந்தக் குடும்பத்தில் நடப்பது ஆகியவையெல்லாம், யாருக்கோ எங்கேயோ ஏற்கனவே செய்யப்பட்ட அநியாயங்களின் நுழைவுதானே தவிர வேறல்ல.
தகுதியுள்ள ஒருவருக்கு உதவி செய்யாமல் போனதினால் அவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும், உதவி செய்யாதவன் வீட்டுக்குள் அநியாயங்களாக நுழையும் என்பது நிஜம். பணமிருந்தும் சமாதானமில்லாத குடும்பங்கள் பல உள்ளன. இவர்களெல்லாம் அநியாயத்தை வரவழைத்துக் கொண்டவர்கள்.
இதுபோன்ற அநியாயங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது எப்படி? இதற்கு வேதம் மட்டுமே வழிகாட்டியாய் உள்ளது. மூதாதையர் செய்த பாவங்களில் ஒருசிலவற்றை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். மற்றவர்களின் சொத்துகள், பொருட்கள் எதுவும் மூதாதைகள் மூலம் அநியாயமாய் நம்மிடம் வந்திருந்தால் அதை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம்.
இதுபற்றி இயேசுவும் நேரடியாகவே போதித்துள்ளார். அவர், ‘நீ பலி பீடத்தினிடத்தில் (ஆலயத்தில்) உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ என்று கூறியிருக்கிறார் (மத்.5:23,24).
நமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார். இல்லாவிட்டால், எல்லாம் இருந்தும் திருப்தியற்றே வாழ்க்கை முடியும்.
அநியாய பொருட்களை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால் சரீர ரீதியான கள்ள உறவுகளை எப்படி நிவர்த்தி செய்வது? அதுபற்றி இறைவனிடம் மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையிடமும், கள்ள உறவில் இணைந்தவரின் வாழ்க்கைத் துணையிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும். எனவே அநியாயங்களை செய்து அநியாயங்களுக்கு பலியாக வேண்டாம்.
தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள்.
மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது. யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும்.
புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி. என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார்.
அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.
இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.
தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
-அருட்பணி. குருசு கார்மல்,
புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி. என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார்.
அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.
இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.
தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
-அருட்பணி. குருசு கார்மல்,
“கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.
தவக்காலம் என்பது மனித-இறை உறவுக்கு நம்மை அழைத்து செல்லும் காலம். இது அருளின் காலம், நம் மனமாற்றத்தின் காலம். நற்செயல்கள் செய்ய நம்மை தூண்டுகிற காலம். இந்த அரிய தவக்காலத்தில் தவம், ஜெபம் போன்ற நற்செயல்களில் தவறாமல் நாம் ஈடுபட வேண்டும்.
“செத்துப்போன குதிரையை விட நொண்டியான கழுதையே மேல்” என்று இத்தாலி நாட்டில் ஒரு பழமொழி உண்டு. உடலின் ஊனம் என்பது பிறரன்பு பணிக்கு எப்போதும் தடையில்லை. இதனை நாம் உணர்ந்து சிந்தித்து செயல்பட இந்த தவக்காலம் நம்மை தூண்டுகிறது. கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும், கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கை உண்டு.
உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே (யாக்கோபு 2:26) கடவுள் எப்போதும் நம்மில் செயலாற்றுகிறார். “கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.
சட்டங்கள் மனிதருக்காக; மனிதர் சட்ட திட்டங்களுக்காக அல்ல. ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல. ஆயினும் மனிதன் எப்படியும் வாழலாம் என்றல்ல; மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டவன் ஆகிறான். அந்நியதியின் படி வாழ்கின்றவர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.
எனவே கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்பதை நம்பும் அனைவரும் கடவுளின் அன்பு செயலை செய்ய வேண்டும். எப்படி? உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக! உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள் (மத் 5:43) என்ற இயேசுவின் பொன் மொழிகளை கடைபிடித்து வாழ வேண்டும். அதன் மூலம் கடவுள் நம்மில் எப்போதும் செயலாற்றுவார்.
இந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் பயணித்திட முயற்சிப்போம். இந்த தவக்கால வாழ்நாளில் சாதனையாளர்கள் ஆவோம்.
அருட்திரு. எஸ்.செந்தூரியன், வக்கம்பட்டி.
“செத்துப்போன குதிரையை விட நொண்டியான கழுதையே மேல்” என்று இத்தாலி நாட்டில் ஒரு பழமொழி உண்டு. உடலின் ஊனம் என்பது பிறரன்பு பணிக்கு எப்போதும் தடையில்லை. இதனை நாம் உணர்ந்து சிந்தித்து செயல்பட இந்த தவக்காலம் நம்மை தூண்டுகிறது. கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும், கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கை உண்டு.
உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே (யாக்கோபு 2:26) கடவுள் எப்போதும் நம்மில் செயலாற்றுகிறார். “கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.
சட்டங்கள் மனிதருக்காக; மனிதர் சட்ட திட்டங்களுக்காக அல்ல. ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல. ஆயினும் மனிதன் எப்படியும் வாழலாம் என்றல்ல; மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டவன் ஆகிறான். அந்நியதியின் படி வாழ்கின்றவர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.
எனவே கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்பதை நம்பும் அனைவரும் கடவுளின் அன்பு செயலை செய்ய வேண்டும். எப்படி? உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக! உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள் (மத் 5:43) என்ற இயேசுவின் பொன் மொழிகளை கடைபிடித்து வாழ வேண்டும். அதன் மூலம் கடவுள் நம்மில் எப்போதும் செயலாற்றுவார்.
இந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் பயணித்திட முயற்சிப்போம். இந்த தவக்கால வாழ்நாளில் சாதனையாளர்கள் ஆவோம்.
அருட்திரு. எஸ்.செந்தூரியன், வக்கம்பட்டி.
இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.
விவிலியத்திலுள்ள நூல்களில் முக்கியமான ஒரு நூல் பேதுருவின் நூல். பேதுரு, ‘தன்னை இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன்’ என அடையாளப்படுத்துகிறார் (1 பேதுரு 1:1).
அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதை திருத்தூதர் பணிகள் 4-ம் அதிகாரம் நமக்குச் சொல்கிறது. அதாவது முறையான கல்வியை அவர் பெற்றிருக்கவில்லை.
முறையான கல்வியற்ற ஒருவராய் இருந்தாலும் ஆவியானவர் நினைத்தால் அவரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அறிவும், ஞானமும் உள்ளவராக மாற்ற முடியும் என்பதை பேதுருவின் வாழ்க்கை நமக்கு வெளிக்காட்டுகிறது.
“கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்” என்கிறது விவிலியம் (1 கொரி 1:27).
சீமோனாக இருந்த அந்த சீடரை ‘பேதுரு’ என இயேசு மாற்றுகிறார். இந்த இரண்டு பெயர்களும் கிறிஸ்தவனின் இரண்டு தன்மைகளைக் குறிக்கின்றன. பழைய மனிதன் சீமோன், அது தோல்வியடைகிற இயல்புடைய ஒன்று. புதிய சுபாவம் பேதுரு. அது வெற்றி தரக்கூடியது. அது ஆண்டவரால் கொடுக்கப்பட்ட பெயர்.
சீமோன் ஒரு சாதாரண மனிதனாக, கடவுளால் களிமண்ணாக உருவானவன். அவனை கடவுள் ஒரு பாறையாக மாற்றுகிறார். இது சீமோன் பேதுருவின் வாழ்க்கையில் நடைபெறுகின்ற மாற்றம். இது பேதுருவின் வாழ்வில் மட்டும் நிகழ்கின்ற நிகழ்வு அல்ல. நம் எல்லாருடைய வாழ்விலும் நிகழ்கின்ற செயல். ஊனியல்பின்படி மனிதனாக பிறக்கின்ற ஒருவரை இறைவன் எடுத்து மிக உயரிய பாத்திரமாக மாற்றுகிறார்.
பவுலும் பேதுருவும் அந்தக்காலத்தில் முக்கியமான திருத்தூதர்களாக இருந்தவர்கள். பவுல் பிற இன மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பேதுருவோ யூத மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சகோதரர்களை ஸ்திரப்படுத்துற ஒருவராகவும், மந்தையை மேய்க்கிறவராகவும் பேதுருவை இறைவன் மாற்றினார்.
பேதுரு எழுதிய நூலானது ‘புத்தி சொல்வதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்’. பாடு அனுபவித்தலைப் பற்றிய சிந்தனைகள், இந்தக்கடிதம் முழுவதும் நிரம்பியிருப்பதை நாம் பார்க்கலாம். அத்துடன் மகிமையைப் பற்றிய கருத்தும் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிலுவையை நாம் பார்க்கும்போது, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கும் போது, வலியின் எண்ணம் நமக்கு வருகிறது. ஏன் அவர் சிலுவையில் தொங்கினார் என்பதைத் தியானிக்கும் போது அது கொண்டு வருகின்ற மகிமையும் நமது சிந்தனையில் வருகிறது.
பேதுருவின் நூல் முழுவதும் ‘கிருபை’ என்கிற வார்த்தை அழுத்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் காரணம், பாடு அனுபவித்தல் கொண்டு வருகின்ற மகிமையை நமக்குப் பெற்றுத் தருவது இறைவனின் கிருபை என்பது தான். கிருபையினால் மட்டுமே இது நிகழ்கிறது.
மாசு படிந்த உலகில் தூய்மையான வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நியாயத் தீர்ப்பு எனும் இறுதித் தீர்ப்பு நாளைக் குறித்த அச்சம் நமக்குத் தேவையில்லை. தூய்மையான வாழ்க்கை வாழ்வது மட்டுமே அவசியம் என்பதை பேதுரு வலியுறுத்துகிறார். இறைவன் பரிசுத்தமாகவும், நீதிமானாகவும் இருப்பதால் அவர் எப்போதும் பாவத்தோடு சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்.
அவர் மன்னிக்கிறவர், இரக்கமுடையவர். ஆனால் மக்கள் பாவத்தில் அமிழ்ந்து வாழ அனுமதிக்காதவர். எந்தப் பாவியையும் ஏற்றுக்கொள்ள அவர் தயங்குவதில்லை. ஆனால் பாவத்தில் மகிழ்ந்து வாழ்வதை அவர் அனுமதிப்பதில்லை. அவர் பாவத்தை வெறுக்கிறவர், பாவிகளை நேசிக்கிறவர்.
ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்த கணக்கைக் கொடுத்து, அதற்கான பலனை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நாள் தான் நியாயத் தீர்ப்பு. நாம் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே நமக்கு அவர் இட்ட பணியை நிறைவேற்றி அதன் கணக்கை அவரிடம் கொடுக்க வேண்டும்.
திருவிருந்தின் போது இறைவனுடைய பாடு, மரணம் போன்றவற்றை நினைவு கூருகிறோம். அப்போது நாம் மீட்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்தல் என்பது தூய்மையான வாழ்க்கை வாழ நம்மை தூண்டும் செயல்.
ஒரு அடிமையை மீட்க வேண்டுமெனில் பணம் போதும். ஆனால் பாவத்துக்கு அடிமையாக வாழ்பவன் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், பாவத்தை பணத்தால் சரிசெய்ய முடியாது என்பது தான். இறைவனின் ஆவியினாலும், அவருடைய கிருபையினாலும் தான் நாம் மீட்கப்படுகிறோம். நமது செயல்களினாலோ, பணத்தினாலோ அல்ல.
எகிப்தை விட்டு மோசேயினால் மீட்டுக்கொண்டு வரப்பட்ட மக்கள், தங்கள் சிந்தனைகளில் இருந்து எகிப்தை அழிக்கவில்லை. அதே போல நாமும் புதிய மீட்புக்குள் நுழையும் போது பாவ வாழ்க்கையை மனதை விட்டு அழிக்காமல் இருந்தால் நிலைவாழ்வை அடைய முடியாது.
இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.
அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதை திருத்தூதர் பணிகள் 4-ம் அதிகாரம் நமக்குச் சொல்கிறது. அதாவது முறையான கல்வியை அவர் பெற்றிருக்கவில்லை.
முறையான கல்வியற்ற ஒருவராய் இருந்தாலும் ஆவியானவர் நினைத்தால் அவரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அறிவும், ஞானமும் உள்ளவராக மாற்ற முடியும் என்பதை பேதுருவின் வாழ்க்கை நமக்கு வெளிக்காட்டுகிறது.
“கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்” என்கிறது விவிலியம் (1 கொரி 1:27).
சீமோனாக இருந்த அந்த சீடரை ‘பேதுரு’ என இயேசு மாற்றுகிறார். இந்த இரண்டு பெயர்களும் கிறிஸ்தவனின் இரண்டு தன்மைகளைக் குறிக்கின்றன. பழைய மனிதன் சீமோன், அது தோல்வியடைகிற இயல்புடைய ஒன்று. புதிய சுபாவம் பேதுரு. அது வெற்றி தரக்கூடியது. அது ஆண்டவரால் கொடுக்கப்பட்ட பெயர்.
சீமோன் ஒரு சாதாரண மனிதனாக, கடவுளால் களிமண்ணாக உருவானவன். அவனை கடவுள் ஒரு பாறையாக மாற்றுகிறார். இது சீமோன் பேதுருவின் வாழ்க்கையில் நடைபெறுகின்ற மாற்றம். இது பேதுருவின் வாழ்வில் மட்டும் நிகழ்கின்ற நிகழ்வு அல்ல. நம் எல்லாருடைய வாழ்விலும் நிகழ்கின்ற செயல். ஊனியல்பின்படி மனிதனாக பிறக்கின்ற ஒருவரை இறைவன் எடுத்து மிக உயரிய பாத்திரமாக மாற்றுகிறார்.
பவுலும் பேதுருவும் அந்தக்காலத்தில் முக்கியமான திருத்தூதர்களாக இருந்தவர்கள். பவுல் பிற இன மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பேதுருவோ யூத மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சகோதரர்களை ஸ்திரப்படுத்துற ஒருவராகவும், மந்தையை மேய்க்கிறவராகவும் பேதுருவை இறைவன் மாற்றினார்.
பேதுரு எழுதிய நூலானது ‘புத்தி சொல்வதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்’. பாடு அனுபவித்தலைப் பற்றிய சிந்தனைகள், இந்தக்கடிதம் முழுவதும் நிரம்பியிருப்பதை நாம் பார்க்கலாம். அத்துடன் மகிமையைப் பற்றிய கருத்தும் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிலுவையை நாம் பார்க்கும்போது, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கும் போது, வலியின் எண்ணம் நமக்கு வருகிறது. ஏன் அவர் சிலுவையில் தொங்கினார் என்பதைத் தியானிக்கும் போது அது கொண்டு வருகின்ற மகிமையும் நமது சிந்தனையில் வருகிறது.
பேதுருவின் நூல் முழுவதும் ‘கிருபை’ என்கிற வார்த்தை அழுத்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் காரணம், பாடு அனுபவித்தல் கொண்டு வருகின்ற மகிமையை நமக்குப் பெற்றுத் தருவது இறைவனின் கிருபை என்பது தான். கிருபையினால் மட்டுமே இது நிகழ்கிறது.
மாசு படிந்த உலகில் தூய்மையான வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நியாயத் தீர்ப்பு எனும் இறுதித் தீர்ப்பு நாளைக் குறித்த அச்சம் நமக்குத் தேவையில்லை. தூய்மையான வாழ்க்கை வாழ்வது மட்டுமே அவசியம் என்பதை பேதுரு வலியுறுத்துகிறார். இறைவன் பரிசுத்தமாகவும், நீதிமானாகவும் இருப்பதால் அவர் எப்போதும் பாவத்தோடு சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்.
அவர் மன்னிக்கிறவர், இரக்கமுடையவர். ஆனால் மக்கள் பாவத்தில் அமிழ்ந்து வாழ அனுமதிக்காதவர். எந்தப் பாவியையும் ஏற்றுக்கொள்ள அவர் தயங்குவதில்லை. ஆனால் பாவத்தில் மகிழ்ந்து வாழ்வதை அவர் அனுமதிப்பதில்லை. அவர் பாவத்தை வெறுக்கிறவர், பாவிகளை நேசிக்கிறவர்.
ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்த கணக்கைக் கொடுத்து, அதற்கான பலனை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நாள் தான் நியாயத் தீர்ப்பு. நாம் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே நமக்கு அவர் இட்ட பணியை நிறைவேற்றி அதன் கணக்கை அவரிடம் கொடுக்க வேண்டும்.
திருவிருந்தின் போது இறைவனுடைய பாடு, மரணம் போன்றவற்றை நினைவு கூருகிறோம். அப்போது நாம் மீட்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்தல் என்பது தூய்மையான வாழ்க்கை வாழ நம்மை தூண்டும் செயல்.
ஒரு அடிமையை மீட்க வேண்டுமெனில் பணம் போதும். ஆனால் பாவத்துக்கு அடிமையாக வாழ்பவன் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், பாவத்தை பணத்தால் சரிசெய்ய முடியாது என்பது தான். இறைவனின் ஆவியினாலும், அவருடைய கிருபையினாலும் தான் நாம் மீட்கப்படுகிறோம். நமது செயல்களினாலோ, பணத்தினாலோ அல்ல.
எகிப்தை விட்டு மோசேயினால் மீட்டுக்கொண்டு வரப்பட்ட மக்கள், தங்கள் சிந்தனைகளில் இருந்து எகிப்தை அழிக்கவில்லை. அதே போல நாமும் புதிய மீட்புக்குள் நுழையும் போது பாவ வாழ்க்கையை மனதை விட்டு அழிக்காமல் இருந்தால் நிலைவாழ்வை அடைய முடியாது.
இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.
இறைவனை ஆலயம், ஆலயமாகச் சென்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, கண்ணால் காண முடியாத கடவுளை அவர் சாயலில் விளங்குகின்ற சகமனிதரில் பார்த்து அன்பு செய்வோம்.
இறைவனை ஆலயம், ஆலயமாகச் சென்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, கண்ணால் காண முடியாத கடவுளை அவர் சாயலில் விளங்குகின்ற சகமனிதரில் பார்த்து அன்பு செய்வோம். பல அர்த்தமிக்க உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் நமது வாழ்விலும் ஏற்பட்டிருக்கும். நாம் பஸ்சில் பயணம் செய்தபோது வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்கலாம்.
உடல் ஊனமுற்றவர்கள் தேவையில் இருக்கும் போது நாமாக வந்து உதவியிருக்கலாம். படிக்கிற மாணவர்கள் தங்களோடு உள்ள பிற மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கலாம். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வேதனையோடு படுத்திருக்கும்போது, ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். இதுபோன்ற செயல்பாடுகளில் எல்லாம் நாம் கடவுளை பிரதிபலித்திருக்கிறோம். தவக்காலத்தில் இன்றைய நாள் சிந்தனை “கடவுளை ஆலயத்திலும், சட்ட திட்டத்திலும் காண்பதை விட சக மனிதரில் காண்போம்” என்றே அழைக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் நம்மை அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்கின்றோம். அதேபோன்று கடவுளையும் அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பிறர்மீது கொண்ட அன்பிலும், அக்கறையிலுமே இறை அன்பு வெளிப்படுகின்றது. ஆங்கிலக் கவிஞன் செஸ்டர்டன் இவ்வாறு கூறுவார், “நம்மில் பலருக்கு கடவுளை நேசிப்பதில் எவ்விதமான சிக்கலுமில்லை. மனிதர்களை நேசிப்பதில் தான் சிக்கல் இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக அருகில் இருக்கின்ற மனிதர்களை அன்பு செய்வதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. கடவுளோடு கொண்டிருக்கின்ற அன்பு, சிந்தனைப் பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிவதில்லை. ஆனால் மனிதர்களை அன்பு செய்வது, அனுபவ பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிகின்றது” என்பார். ஆதலால் கடவுளோடு கொண்டுள்ள உறவை கண்ணால் காணுகின்ற மனிதர்களிடம் காட்டும் அன்பில், அக்கறையில் வெளிப்படுத்துவோம்.
நமது அருகாமை இல்லங்களில் மாபெரும் நெருக்கடிகளுக்குள்ளும், மன இறுக்கங்களுக்குள்ளும் உள்ளாகி துன்புறும் மனிதர்களை தேடிச் செல்வோம். யாருக்கு என் அன்பு தேவைப்படுகின்றது என்பதனை குறித்துக் கொள்வோம். அப்படி வாடும் மனிதர்களை இனம் கண்டு அவரில் இயேசுவைக் காண்போம். பொருளைக் கொடுப்பதைவிட, நமது உடனிருப்பை அவர்களுக்கு அளிப்போம். “ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதனை உதட்டளவில் உச்சரிக்காது, உள்ளத்தளவில் வாழ்ந்து காட்டுவோம். நாம் வாழும் இல்லம், இறைவனின் இல்லமாக, சக மனிதரில் இயேசுவைக் கண்டுபிடிப்போம்.
அருட்பணி. குருசு கார்மல்,
தூய சவேரியார் பேராலயம்,
கோட்டார், நாகர்கோவில்.
உடல் ஊனமுற்றவர்கள் தேவையில் இருக்கும் போது நாமாக வந்து உதவியிருக்கலாம். படிக்கிற மாணவர்கள் தங்களோடு உள்ள பிற மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கலாம். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வேதனையோடு படுத்திருக்கும்போது, ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். இதுபோன்ற செயல்பாடுகளில் எல்லாம் நாம் கடவுளை பிரதிபலித்திருக்கிறோம். தவக்காலத்தில் இன்றைய நாள் சிந்தனை “கடவுளை ஆலயத்திலும், சட்ட திட்டத்திலும் காண்பதை விட சக மனிதரில் காண்போம்” என்றே அழைக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் நம்மை அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்கின்றோம். அதேபோன்று கடவுளையும் அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பிறர்மீது கொண்ட அன்பிலும், அக்கறையிலுமே இறை அன்பு வெளிப்படுகின்றது. ஆங்கிலக் கவிஞன் செஸ்டர்டன் இவ்வாறு கூறுவார், “நம்மில் பலருக்கு கடவுளை நேசிப்பதில் எவ்விதமான சிக்கலுமில்லை. மனிதர்களை நேசிப்பதில் தான் சிக்கல் இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக அருகில் இருக்கின்ற மனிதர்களை அன்பு செய்வதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. கடவுளோடு கொண்டிருக்கின்ற அன்பு, சிந்தனைப் பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிவதில்லை. ஆனால் மனிதர்களை அன்பு செய்வது, அனுபவ பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிகின்றது” என்பார். ஆதலால் கடவுளோடு கொண்டுள்ள உறவை கண்ணால் காணுகின்ற மனிதர்களிடம் காட்டும் அன்பில், அக்கறையில் வெளிப்படுத்துவோம்.
நமது அருகாமை இல்லங்களில் மாபெரும் நெருக்கடிகளுக்குள்ளும், மன இறுக்கங்களுக்குள்ளும் உள்ளாகி துன்புறும் மனிதர்களை தேடிச் செல்வோம். யாருக்கு என் அன்பு தேவைப்படுகின்றது என்பதனை குறித்துக் கொள்வோம். அப்படி வாடும் மனிதர்களை இனம் கண்டு அவரில் இயேசுவைக் காண்போம். பொருளைக் கொடுப்பதைவிட, நமது உடனிருப்பை அவர்களுக்கு அளிப்போம். “ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதனை உதட்டளவில் உச்சரிக்காது, உள்ளத்தளவில் வாழ்ந்து காட்டுவோம். நாம் வாழும் இல்லம், இறைவனின் இல்லமாக, சக மனிதரில் இயேசுவைக் கண்டுபிடிப்போம்.
அருட்பணி. குருசு கார்மல்,
தூய சவேரியார் பேராலயம்,
கோட்டார், நாகர்கோவில்.
மதுரை டவுன்ஹால் ரோடு புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை டவுன்ஹால் ரோடு புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. தமிழ் மறை மாநில அதிபரும் அருட்தந்தையுமான ஜோசப்செங்கோல் சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்றி வைத்தார். பங்கு தந்தை பிரிட்டோ பாக்கியராஜ், உதவி பங்கு தந்தை அற்புதஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பிரேம், செயலாளர் ராஜன், துணை செயலாளர் ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த திருவிழா அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் மாலையில் பல்வேறு பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலிகள் நிகழ்த்துகின்றனர். இதுபோல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்துகிறார். அன்றைய தினம் மாலையில் செபமாலை அன்னையின் திருவுருவ தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த திருவிழா அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் மாலையில் பல்வேறு பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலிகள் நிகழ்த்துகின்றனர். இதுபோல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்துகிறார். அன்றைய தினம் மாலையில் செபமாலை அன்னையின் திருவுருவ தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் பெற மனுமகனாய், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசு - தன் ஒளியை பிறர் பிரதிபலிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.
இறைவனைக் காண வேண்டும், அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும். அப்படி அவர் நம்மை சந்திக்கும் போது, நாம் அவரை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்கின்றன.
இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரை சந்தித்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், அதனால் என்னவிதமான நன்மைகள் பெற்றுக்கொண்டார்கள் என்று வேதத்திலே ஏராளமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒருநாள் இயேசு கெனசரேத்து கடற்கரையில் நின்றுகொண்டிருக் கிறார், அநேக மக்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்திருந்தனர். அங்குமிங்கும் பார்க்கிறார் இயேசு. அருகிலிருந்த படகு ஒன்றை சற்று தள்ளும்படி சொல்லி அதில் அமர்ந்து மக்களோடு பேச ஆரம்பிக்கிறார்.
அந்த படகு சீமோனுடையது, அந்த சீமோன் ராத்திரி முழுவதும் உழைத்தும் ஒன்றும் கிடைக்காத வெறுமை நிலையில் இருந்தார். எனினும், அதனை வெளிக்காட்டாமல் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மக்களிடம் பேசி முடித்த இயேசு, சீமோனைப் பார்த்து “ஆழத்திலே உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொன்னார்.
ராத்திரியின் ஏமாற்றம் ஒரு புறம். தச்சு தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்த இயேசுவை விட, கடலோடு தனக்குள்ள அனுபவம் பெரிது எனும் எண்ணம் மறுபுறம். எனினும், இயேசுவை இறைமகனாக கண்டு, அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் படி மீன் பிடிக்கச் சென்றார். வலைகள் கிழியத்தக்கதாய் மீன்களைப் பிடித்தார்.
இப்பொழுது தான் சீமோனுக்கு ஒரு உண்மை உறைக்கிறது. இத்தனை ஆண்டுகள் நான் மீன் பிடித்த கடல், எனக்கு மிகவும் பழக்கமான கடலும் கூட, என்னால் ஒரு இரவு முழுவதும் உழைத்தும் ஒன்றும் பிடிக்கமுடியவில்லை. ஆனால், இவரால் என் வலைகள் கிழியக்கூடிய அளவுக்கு மீன்கள் இந்த கடலில் எங்கிருக்கிறதென்று சொல்ல முடிகிறது. அப்படியெனில் இவரால் என் மனதிலிருக்கும் அழுக்கையும் கண்டுபிடிக்க முடியும் என்று உணர்ந்தார்.
இயேசுவின் கால்களில் விழுந்து “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். இயேசு சீமோனை நோக்கி “பயப்படாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்றார். தனக்கு கிடைத்த மீன்களையும், படகையும் விட்டுவிட்டு சீமோன் உடனடியாக இயேசுவைப் பின்பற்றினார்.
இன்னொரு நாள் இயேசு அவரது சீடர்களோடு கெரசேனர் என்னும் பகுதிக்கு சென்றார். அங்கே பேய் பிடித்திருந்த ஒருவரைக் கண்டு, அவரிடம் பேசுகிறார். அவர் தன் பெயர் இலேகியோன் என்று கூறினார்.
இலேகியோன் என்பது உரோமப்படையின் 6 ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப் பிரிவு - அவருக்குள் பல பேய்கள் புகுந்திருந்தன என்பதே அதன் பொருள்.
தங்களை பாதாளத்துக்கு துரத்தவேண்டாம் என்றும், துரத்துவதென்றால், அருகில் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளிடம் புக அனுமதிக்க வேண்டுமென்றும் பேய்கள் இயேசுவை கேட்டுக்கொண்டன. இயேசுவும் அனுமதிக்க, பேய்கள் பன்றிகளில் புகுந்தன. பன்றிக்கூட்டம் பாறையிலிருந்து கடலில் விழுந்து இறந்தது.
இதை அறிந்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நடந்தவற்றை கேட்டு பயப்பட்டு, தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
இரண்டு நிகழ்வுகள்- இரண்டிலும் இயேசு தாமாக சென்று அற்புதம் செய்கிறார். சீமோன், அந்த அற்புதத்தின் வழியாக தன் குறையை உணர்ந்தார். இவர் என்னருகிலிருந்தால் தொழில் ரீதியாக லாபமீட்ட முடியும் என்று நினைக்காமல், இவருக்கு அருகில் நிற்கவும் நான் தகுதியற்றவன் என்று அவரை போக சொல்கிறார்.
ஆனால் இயேசுவோ, தன்னிலை உணர்ந்த சீமோனிடம் தன்னைப் பின்பற்றி வர அழைக்கிறார். தனக்குக் கிடைத்த பெரிய லாபத்தையும் விட்டு விட்டு இயேசுவுக்கு பின்சென்றார் சீமோன்.
அன்று வரை மீன் பிடித்து, அது செத்தபின் அதை விற்று வாழ்க்கை நடத்தியவர். அன்றிலிருந்து, நடை பிணமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் ஆன்மாக்களை இயேசுவிடம் அழைத்து வருபவனாக மாற்றம் பெற்றான்.
ஆனால் இரண்டாவது நிகழ்வில் வரும் கெரசேனர் பகுதி மக்களோ தங்களுக்கு இயேசுவால் இழப்பு என்று அறிந்ததும், இயேசுவையே தங்கள் ஊர் எல்லையிலிருந்து துரத்தி விட்டனர்.
இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் பெற மனுமகனாய், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசு - தன் ஒளியை பிறர் பிரதிபலிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.
அப்படி நாம் ஒளியின் அருகில் செல்லும்போது, நம்மிலிருக்கும் அழுக்குகள் தெளிவாக தெரியத் தொடங்கும். அப்பொழுது, நாம் நம் அழுக்கை போக்குவதற்கான முயற்சியை எடுக்கிறோமா, அல்லது, இந்த ஒளி, என் அழுக்கை வெளிக்காட்டுகிறது, எனவே இந்த வெளிச்சம் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறோமா என்பதில் தான் நம் வாழ்க்கையின் குறிக்கோள் அடங்கிஇருக்கிறது.
சகோ. ஹெசட் காட்சன், சென்னை.
இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரை சந்தித்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், அதனால் என்னவிதமான நன்மைகள் பெற்றுக்கொண்டார்கள் என்று வேதத்திலே ஏராளமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒருநாள் இயேசு கெனசரேத்து கடற்கரையில் நின்றுகொண்டிருக் கிறார், அநேக மக்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்திருந்தனர். அங்குமிங்கும் பார்க்கிறார் இயேசு. அருகிலிருந்த படகு ஒன்றை சற்று தள்ளும்படி சொல்லி அதில் அமர்ந்து மக்களோடு பேச ஆரம்பிக்கிறார்.
அந்த படகு சீமோனுடையது, அந்த சீமோன் ராத்திரி முழுவதும் உழைத்தும் ஒன்றும் கிடைக்காத வெறுமை நிலையில் இருந்தார். எனினும், அதனை வெளிக்காட்டாமல் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மக்களிடம் பேசி முடித்த இயேசு, சீமோனைப் பார்த்து “ஆழத்திலே உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொன்னார்.
ராத்திரியின் ஏமாற்றம் ஒரு புறம். தச்சு தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்த இயேசுவை விட, கடலோடு தனக்குள்ள அனுபவம் பெரிது எனும் எண்ணம் மறுபுறம். எனினும், இயேசுவை இறைமகனாக கண்டு, அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் படி மீன் பிடிக்கச் சென்றார். வலைகள் கிழியத்தக்கதாய் மீன்களைப் பிடித்தார்.
இப்பொழுது தான் சீமோனுக்கு ஒரு உண்மை உறைக்கிறது. இத்தனை ஆண்டுகள் நான் மீன் பிடித்த கடல், எனக்கு மிகவும் பழக்கமான கடலும் கூட, என்னால் ஒரு இரவு முழுவதும் உழைத்தும் ஒன்றும் பிடிக்கமுடியவில்லை. ஆனால், இவரால் என் வலைகள் கிழியக்கூடிய அளவுக்கு மீன்கள் இந்த கடலில் எங்கிருக்கிறதென்று சொல்ல முடிகிறது. அப்படியெனில் இவரால் என் மனதிலிருக்கும் அழுக்கையும் கண்டுபிடிக்க முடியும் என்று உணர்ந்தார்.
இயேசுவின் கால்களில் விழுந்து “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். இயேசு சீமோனை நோக்கி “பயப்படாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்றார். தனக்கு கிடைத்த மீன்களையும், படகையும் விட்டுவிட்டு சீமோன் உடனடியாக இயேசுவைப் பின்பற்றினார்.
இன்னொரு நாள் இயேசு அவரது சீடர்களோடு கெரசேனர் என்னும் பகுதிக்கு சென்றார். அங்கே பேய் பிடித்திருந்த ஒருவரைக் கண்டு, அவரிடம் பேசுகிறார். அவர் தன் பெயர் இலேகியோன் என்று கூறினார்.
இலேகியோன் என்பது உரோமப்படையின் 6 ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப் பிரிவு - அவருக்குள் பல பேய்கள் புகுந்திருந்தன என்பதே அதன் பொருள்.
தங்களை பாதாளத்துக்கு துரத்தவேண்டாம் என்றும், துரத்துவதென்றால், அருகில் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளிடம் புக அனுமதிக்க வேண்டுமென்றும் பேய்கள் இயேசுவை கேட்டுக்கொண்டன. இயேசுவும் அனுமதிக்க, பேய்கள் பன்றிகளில் புகுந்தன. பன்றிக்கூட்டம் பாறையிலிருந்து கடலில் விழுந்து இறந்தது.
இதை அறிந்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நடந்தவற்றை கேட்டு பயப்பட்டு, தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
இரண்டு நிகழ்வுகள்- இரண்டிலும் இயேசு தாமாக சென்று அற்புதம் செய்கிறார். சீமோன், அந்த அற்புதத்தின் வழியாக தன் குறையை உணர்ந்தார். இவர் என்னருகிலிருந்தால் தொழில் ரீதியாக லாபமீட்ட முடியும் என்று நினைக்காமல், இவருக்கு அருகில் நிற்கவும் நான் தகுதியற்றவன் என்று அவரை போக சொல்கிறார்.
ஆனால் இயேசுவோ, தன்னிலை உணர்ந்த சீமோனிடம் தன்னைப் பின்பற்றி வர அழைக்கிறார். தனக்குக் கிடைத்த பெரிய லாபத்தையும் விட்டு விட்டு இயேசுவுக்கு பின்சென்றார் சீமோன்.
அன்று வரை மீன் பிடித்து, அது செத்தபின் அதை விற்று வாழ்க்கை நடத்தியவர். அன்றிலிருந்து, நடை பிணமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் ஆன்மாக்களை இயேசுவிடம் அழைத்து வருபவனாக மாற்றம் பெற்றான்.
ஆனால் இரண்டாவது நிகழ்வில் வரும் கெரசேனர் பகுதி மக்களோ தங்களுக்கு இயேசுவால் இழப்பு என்று அறிந்ததும், இயேசுவையே தங்கள் ஊர் எல்லையிலிருந்து துரத்தி விட்டனர்.
இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் பெற மனுமகனாய், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசு - தன் ஒளியை பிறர் பிரதிபலிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.
அப்படி நாம் ஒளியின் அருகில் செல்லும்போது, நம்மிலிருக்கும் அழுக்குகள் தெளிவாக தெரியத் தொடங்கும். அப்பொழுது, நாம் நம் அழுக்கை போக்குவதற்கான முயற்சியை எடுக்கிறோமா, அல்லது, இந்த ஒளி, என் அழுக்கை வெளிக்காட்டுகிறது, எனவே இந்த வெளிச்சம் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறோமா என்பதில் தான் நம் வாழ்க்கையின் குறிக்கோள் அடங்கிஇருக்கிறது.
சகோ. ஹெசட் காட்சன், சென்னை.
இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.
காலம் காட்டும் கடிகாரத்தில், கடந்து செல்லும் நாட்களில் கடவுள் குறித்த நேரம் வரும்போதே காலச்செயல்கள் கனிகின்றன. ஆம், உருண்டோடும் கால ஓட்டத்தில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். மனிதனின் வாழ்க்கை பயணம் ஒவ்வொன்றும் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு என அனைத்தும் கடவுளின் துணையாலே, அவர் தீட்டிய திட்டத்தாலே நடக்கின்றன.
“சிலர் இயேசுவை பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத்தொடவில்லை. (யோவான் 7:40-53) இது கடவுளின் திட்டம். மீட்புத்திட்டம். இவ்வுலகில் நிறைவேற, கடவுள் காலத்தை நகர்த்திட்ட திட்டம்.
இயேசு இறையாட்சி பணிக்காக தன்னையே 30 ஆண்டுகள் தயாரித்த போது. தன் செபத்தால் தந்தையான கடவுளை நன்கு அறிந்திருந்தார். அனுபவித்திருந்தார். அவரது திட்டத்தை நன்கு உணர்ந்திருந்தார். அவரது பராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது சக்தியால் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தார்.
அதனால் தான் யாரும் அவரை தொடவில்லை. அவர் தம் போதனையிலும் எந்தவொரு அச்சமில்லை; தயக்கமில்லை; சோர்வில்லை. அதிகாரத்தோடு போதித்தார். ஞானத்தோடு பரிந்துரைத்தார். இதற்கு மத்தியிலும், அவரது பணியில் ஆயிரம், ஆயிரம் தடைகள், எதிர்ப்பு குரல்கள். அனைத்திலும் கடவுளின் கரம் துணை நின்றது.
“அவரின்றி ஓர் அணுவும் அசையாது என்ற வார்த்தைக்கேற்ப கடவுள் நினைக்கும் வரை, யாரும், யாருக்கும், எதையும், எப்போதும் செய்துவிட முடியாது.” “நான் உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன்” என்ற தந்தை கடவுளின் பராமரிப்பில் நம் மனதை பதிந்து, நம் வாழ்வில் இறைநம்பிக்கை என்னும் நங்கூரத்தை ஊன்றி விட்டால் போதும். வாழ்வு செழிப்பாகும்.
இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.
அருட்சகோதரி. பாக்கியா, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.
“சிலர் இயேசுவை பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத்தொடவில்லை. (யோவான் 7:40-53) இது கடவுளின் திட்டம். மீட்புத்திட்டம். இவ்வுலகில் நிறைவேற, கடவுள் காலத்தை நகர்த்திட்ட திட்டம்.
இயேசு இறையாட்சி பணிக்காக தன்னையே 30 ஆண்டுகள் தயாரித்த போது. தன் செபத்தால் தந்தையான கடவுளை நன்கு அறிந்திருந்தார். அனுபவித்திருந்தார். அவரது திட்டத்தை நன்கு உணர்ந்திருந்தார். அவரது பராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது சக்தியால் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தார்.
அதனால் தான் யாரும் அவரை தொடவில்லை. அவர் தம் போதனையிலும் எந்தவொரு அச்சமில்லை; தயக்கமில்லை; சோர்வில்லை. அதிகாரத்தோடு போதித்தார். ஞானத்தோடு பரிந்துரைத்தார். இதற்கு மத்தியிலும், அவரது பணியில் ஆயிரம், ஆயிரம் தடைகள், எதிர்ப்பு குரல்கள். அனைத்திலும் கடவுளின் கரம் துணை நின்றது.
“அவரின்றி ஓர் அணுவும் அசையாது என்ற வார்த்தைக்கேற்ப கடவுள் நினைக்கும் வரை, யாரும், யாருக்கும், எதையும், எப்போதும் செய்துவிட முடியாது.” “நான் உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன்” என்ற தந்தை கடவுளின் பராமரிப்பில் நம் மனதை பதிந்து, நம் வாழ்வில் இறைநம்பிக்கை என்னும் நங்கூரத்தை ஊன்றி விட்டால் போதும். வாழ்வு செழிப்பாகும்.
இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.
அருட்சகோதரி. பாக்கியா, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.
கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ... 1 கொரி - 3:16
நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனைச் சரியாக அறிந்துணர்ந்து , அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் அநேகர் இவ்விதமான ஒரு சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை.
பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்கச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்ப்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே அநேகர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாகப் போகின்றனர்.
முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீரப் பிரகாரமான வாழ்க்கையும் அமைந்திட வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்துதான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.
எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்குத்தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
அநேகர் எங்கோ போய் தரிசிக்க வேண்டிய ஒருவராக கடவுளைப் பார்க்கின்றார்களேயன்றி, தங்களோடு தங்க விரும்பும் ஒருவராக அவரைப் பார்ப்பதில்லை. எனவே அவர்கள் தாங்கள் எப்படியிருக்கின்றோம் என்பதைக் குறித்து அதிகமாக சிந்திக்காமல், ஜெபம், உபவாசம் வழியாக எப்படியாவது கடவுளுடைய அருளையும், உதவியையும் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே தீவிரமாயிருக்கின்றார்கள். அங்கே தேவனுடைய திட்டமாகிய நம்முடன் தங்குதல் என்பது நிறைவேறாததால் நம்முடைய திட்டங்களையும், வாஞ்சை, விருப்பங்களையும் கடவுள் தந்தருளி ஆசீர்வதிக்கவில்லை. இன்று நாம் கடவுள் தங்கத்தக்கவிதமான ஒரு ஆலயமாயிருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்ப்போமா.
“ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள்
அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.
-சாம்சன் பால்
நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனைச் சரியாக அறிந்துணர்ந்து , அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் அநேகர் இவ்விதமான ஒரு சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை.
பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்கச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்ப்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே அநேகர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாகப் போகின்றனர்.
முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீரப் பிரகாரமான வாழ்க்கையும் அமைந்திட வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்துதான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.
எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்குத்தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
அநேகர் எங்கோ போய் தரிசிக்க வேண்டிய ஒருவராக கடவுளைப் பார்க்கின்றார்களேயன்றி, தங்களோடு தங்க விரும்பும் ஒருவராக அவரைப் பார்ப்பதில்லை. எனவே அவர்கள் தாங்கள் எப்படியிருக்கின்றோம் என்பதைக் குறித்து அதிகமாக சிந்திக்காமல், ஜெபம், உபவாசம் வழியாக எப்படியாவது கடவுளுடைய அருளையும், உதவியையும் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே தீவிரமாயிருக்கின்றார்கள். அங்கே தேவனுடைய திட்டமாகிய நம்முடன் தங்குதல் என்பது நிறைவேறாததால் நம்முடைய திட்டங்களையும், வாஞ்சை, விருப்பங்களையும் கடவுள் தந்தருளி ஆசீர்வதிக்கவில்லை. இன்று நாம் கடவுள் தங்கத்தக்கவிதமான ஒரு ஆலயமாயிருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்ப்போமா.
“ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள்
அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.
-சாம்சன் பால்
பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.
விவிலியத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு சொல்லப்பட்டிருக்கிறது. இறைவாக்கினர் எலியாவுக்கும், 850 போலி இறைவாக்கினர்களுக்கும் இடையே ஆன்மிக யுத்தம் ஒன்று நடக்கிறது. அதைப்பற்றி பார்க்கும் முன் கொஞ்சம் பின்னணியைப் பார்க்கலாம்.
தாவீது மன்னர் இறைவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். அவருக்குப் பின் அவரது மகன் சாலமோன் அரசராகிறார். அவர் கடவுளிடம் ஞானத்தை வரமாய்க் கேட்டு வாங்கியவர். கடவுள் தாவீது மன்னரிடம் சொன்னதன் படி சாலமோன் மன்னன் தேவாலயத்தைக் கட்டுகிறார். சாலமோன் மன்னனின் புகழ் எங்கும் பரவுகிறது.
பின்னர், சாலமோனின் வீழ்ச்சிக்காலம் வருகிறது. சாலமோனின் வாழ்க்கை முடிகிறது. அவருக்குப் பின் ஒன்றாய் இருந்த இஸ்ரேல் நாடு இரண்டாகிறது. யூதா என்றும் இஸ்ரேல் என்றும் அது இரண்டாகிறது. இஸ்ரேலில் எரோபெயாமும், யூதாவிலே ரெகபயாமும் அரசாள்கின்றனர். அதன் பின் பல அரசர்கள் தொடர்ந்து அரசாள்கிறார்கள்.
சாலமோனுக்குப் பின் அரசாட்சி செய்தவர்களில் ஆகாப் அரசாட்சி செய்த காலம், எலியா தீர்க்கதரிசியின் காலம். சிலை வழிபாட்டை பின்பற்றத் தொடங்கியதால் இறைவனின் கோபம் அந்த நாட்டின் மீது இருந்தது. வானம் அடைபட்டது. பஞ்சத்தால் மக்கள் மடியத் தொடங்கினர். ஆகாபுக்கு எலியா மீது பகை, அவரைக் கொல்ல தேடிக்கொண்டிருந்தார்.
இந்த சூழலில் அரண்மனைக் கண்காணிப்பாளர் ஒபதியா மூலமாக ஆகாபைச் சந்திக்க எலியா முயல்கிறார். கொல்ல நினைப்பவன் முன்னால் போய் நிற்பது சாவை விரும்பி அழைப்பது போல என ஒபதியா நினைத்தார். இருந்தாலும் எலியாவின் கட்டாயத்தினால் ஒபதியா அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். அப்படித்தான் எலியாவும் ஆகாபும் சந்திக்கின்றனர்.
எலியாவுக்கு பயம் இல்லை. இறைவன் அளித்த துணிச்சல் அவரிடம் இருந்தது.
“இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீ தானே?” என ஆகாப் கேட்கிறார்.
“இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல; நீயும் உன் தந்தையின் வீட்டாரும் தான். ஏனெனில் நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்!” என்றார் எலியா.
இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆகாப் அதிர்ந்து போனான். எலியாவுக்கும், ஆகாபுக்கும் இடையே, ‘உண்மையான கடவுளை வழிபடுவது யார்?’ எனும் கேள்வி வந்து நிற்கிறது.
‘நீ உன்னுடைய கடவுளுக்கு பலி கொடு, நான் என் கடவுளுக்கு கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்’ என்றார் எலியா.
ஆகாபின் பக்கம் 850 போலி இறைவாக்கினர்களும், கடவுளின் பக்கம் ஒரே ஒரு தேவ மனிதரான எலியாவும் நிற்கின்றனர். பலிக்குரிய ஏற்பாடுகள் ஆயத்தமாயின. இப்போது காத்திருக்கும் நேரம். இறைவனின் பதிலுக்காகவும், அவரது செயலுக்காகவும் காத்திருக்கும் நேரம்.
மனித முயற்சிக்கு கடவுளின் மறுமொழி என்ன? பாகாலின் காளை பலியிடப்படுகிறது. ஆனால் அந்த ரத்தம் மறுமொழி கொடுக்கவில்லை. 850 பேருமாய் சேர்ந்து கத்திப் பார்த்தும், ஆடிப்பாடியும் பாகால் வரவில்லை. செபத்தில் சத்தம் இருந்தால் தான் இறைவனுக்குக் கேட்கும் என்பது பொருளல்ல. ஆவியோடும் உண்மையோடும் செபிப்பதே உண்மை செபம். எலியாவின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கெத்சமெனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு செபித்தார். வேதனையோடு உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை ரத்தத் துளிகளாய் விழுந்து கொண்டிருந்தது. அதை தந்தை கேட்டார்.
அமைதியாய் செபிப்பது கேட்கப்படாது என்பது தவறான சிந்தனை. செபம் கேட்கப்பட வேண்டுமெனில் நமது பலிபீடங்கள் செப்பனிடப்படவேண்டும். எப்போது ரத்தம் பதில் கொடுக்கும்? பலிபீடம் செப்பனிடப்பட்டதாய் இருந்தால் மட்டுமே பதில் சொல்லும்.
மனம் கசிந்து புலம்பி அழுது வேண்டினாள் அன்னாள். இறைவனோடு நெருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்தார். உள்ளத்தால் வேண்டிக்கொண்டிருந்ததால் அவர் உளறிக்கொண்டிருப்பதாய் ஏலி நினைத்தார். அவளோ தனது இதயத்தை இறைவனிடம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. செப்பனிடப்பட்ட பலிபீடம் இறைவனோடு இறுக்கமான உறவைத் தரும். செப்பனிடாத பலிபீடமோ இறைவனிடமிருந்து பதிலைப் பெற்றுத் தராமல் போகும்.
பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.
நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? நமது பலிகளை இறைவன் ஏற்பதற்காய் நமது பலிபீடங்களை செப்பனிடுகிறோமா?
தாவீது மன்னர் இறைவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். அவருக்குப் பின் அவரது மகன் சாலமோன் அரசராகிறார். அவர் கடவுளிடம் ஞானத்தை வரமாய்க் கேட்டு வாங்கியவர். கடவுள் தாவீது மன்னரிடம் சொன்னதன் படி சாலமோன் மன்னன் தேவாலயத்தைக் கட்டுகிறார். சாலமோன் மன்னனின் புகழ் எங்கும் பரவுகிறது.
பின்னர், சாலமோனின் வீழ்ச்சிக்காலம் வருகிறது. சாலமோனின் வாழ்க்கை முடிகிறது. அவருக்குப் பின் ஒன்றாய் இருந்த இஸ்ரேல் நாடு இரண்டாகிறது. யூதா என்றும் இஸ்ரேல் என்றும் அது இரண்டாகிறது. இஸ்ரேலில் எரோபெயாமும், யூதாவிலே ரெகபயாமும் அரசாள்கின்றனர். அதன் பின் பல அரசர்கள் தொடர்ந்து அரசாள்கிறார்கள்.
சாலமோனுக்குப் பின் அரசாட்சி செய்தவர்களில் ஆகாப் அரசாட்சி செய்த காலம், எலியா தீர்க்கதரிசியின் காலம். சிலை வழிபாட்டை பின்பற்றத் தொடங்கியதால் இறைவனின் கோபம் அந்த நாட்டின் மீது இருந்தது. வானம் அடைபட்டது. பஞ்சத்தால் மக்கள் மடியத் தொடங்கினர். ஆகாபுக்கு எலியா மீது பகை, அவரைக் கொல்ல தேடிக்கொண்டிருந்தார்.
இந்த சூழலில் அரண்மனைக் கண்காணிப்பாளர் ஒபதியா மூலமாக ஆகாபைச் சந்திக்க எலியா முயல்கிறார். கொல்ல நினைப்பவன் முன்னால் போய் நிற்பது சாவை விரும்பி அழைப்பது போல என ஒபதியா நினைத்தார். இருந்தாலும் எலியாவின் கட்டாயத்தினால் ஒபதியா அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். அப்படித்தான் எலியாவும் ஆகாபும் சந்திக்கின்றனர்.
எலியாவுக்கு பயம் இல்லை. இறைவன் அளித்த துணிச்சல் அவரிடம் இருந்தது.
“இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீ தானே?” என ஆகாப் கேட்கிறார்.
“இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல; நீயும் உன் தந்தையின் வீட்டாரும் தான். ஏனெனில் நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்!” என்றார் எலியா.
இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆகாப் அதிர்ந்து போனான். எலியாவுக்கும், ஆகாபுக்கும் இடையே, ‘உண்மையான கடவுளை வழிபடுவது யார்?’ எனும் கேள்வி வந்து நிற்கிறது.
‘நீ உன்னுடைய கடவுளுக்கு பலி கொடு, நான் என் கடவுளுக்கு கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்’ என்றார் எலியா.
ஆகாபின் பக்கம் 850 போலி இறைவாக்கினர்களும், கடவுளின் பக்கம் ஒரே ஒரு தேவ மனிதரான எலியாவும் நிற்கின்றனர். பலிக்குரிய ஏற்பாடுகள் ஆயத்தமாயின. இப்போது காத்திருக்கும் நேரம். இறைவனின் பதிலுக்காகவும், அவரது செயலுக்காகவும் காத்திருக்கும் நேரம்.
மனித முயற்சிக்கு கடவுளின் மறுமொழி என்ன? பாகாலின் காளை பலியிடப்படுகிறது. ஆனால் அந்த ரத்தம் மறுமொழி கொடுக்கவில்லை. 850 பேருமாய் சேர்ந்து கத்திப் பார்த்தும், ஆடிப்பாடியும் பாகால் வரவில்லை. செபத்தில் சத்தம் இருந்தால் தான் இறைவனுக்குக் கேட்கும் என்பது பொருளல்ல. ஆவியோடும் உண்மையோடும் செபிப்பதே உண்மை செபம். எலியாவின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கெத்சமெனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு செபித்தார். வேதனையோடு உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை ரத்தத் துளிகளாய் விழுந்து கொண்டிருந்தது. அதை தந்தை கேட்டார்.
அமைதியாய் செபிப்பது கேட்கப்படாது என்பது தவறான சிந்தனை. செபம் கேட்கப்பட வேண்டுமெனில் நமது பலிபீடங்கள் செப்பனிடப்படவேண்டும். எப்போது ரத்தம் பதில் கொடுக்கும்? பலிபீடம் செப்பனிடப்பட்டதாய் இருந்தால் மட்டுமே பதில் சொல்லும்.
மனம் கசிந்து புலம்பி அழுது வேண்டினாள் அன்னாள். இறைவனோடு நெருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்தார். உள்ளத்தால் வேண்டிக்கொண்டிருந்ததால் அவர் உளறிக்கொண்டிருப்பதாய் ஏலி நினைத்தார். அவளோ தனது இதயத்தை இறைவனிடம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. செப்பனிடப்பட்ட பலிபீடம் இறைவனோடு இறுக்கமான உறவைத் தரும். செப்பனிடாத பலிபீடமோ இறைவனிடமிருந்து பதிலைப் பெற்றுத் தராமல் போகும்.
பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.
நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? நமது பலிகளை இறைவன் ஏற்பதற்காய் நமது பலிபீடங்களை செப்பனிடுகிறோமா?
இறைவன் நமக்காக மிக உயரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் போது அந்தத் திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.
தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது. தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என குழந்தை சந்தேகத் துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும் நம்பிக் கைக்குக் காரணம் என்ன? தந்தை யின் சுண்டு விரலின் வலிமையா? இல்லை, குழந்தை தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.
அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறை வனின் தன்மைகளை முழுமையாய் அறிந்து கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக் கை கள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.
இறைவன் எப்படிப்பட்டவர் என் பதை உணரவேண்டுமெனில் அவரது வார்த்தைகள் எப்படிப்பட்டவை என் பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவருடைய வாக்குறுதிகள் எப்படிப் பட்டவைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரது வார்த்தைகளையும், வாக்குறுதிகளை யும் தாங்கியிருக்கின்ற நூல் தான் விவிலியம். அந்த விவிலியத்தின் வார்த்தைகளை நாம் விளங்கிக் கொள் ளும் போது இறைவனை விளங்கிக் கொள்கிறோம்.
கடவுளுடைய வார்த்தைகள் மாறா தவை. அவருடைய வாக்குறு திகள் மாறாதவை. ஆனால் அவை நமது வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற் படுத்தக் கூடிய வலிமை படைத்தவை.
“அவரு சொன்னா சொன்னது தான்” என ஒருவரைப் பற்றி நாம் எப்போது சொல்வோம்? அந்த நபரு டைய குணாதிசயங்கள் எப்படிப் பட்டவை என்பதை அறியும் போது, இல்லையா?. அதே போல தான் இறை வனுடைய வார்த்தைகள் மாறாதவை என்பதைப் புரிந்து கொள்ள அவரு டைய குணாதிசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
“அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறு கின்றவர்” என இறைவனின் குணாதிசயங்களைப் பற்றி யோவேல் (2:13) நூல் விளக்கு கிறது. அது மட்டுமல்ல நமது வாழ்வில் நாம் இழந்து போனவற்றை மீண்டும் நமக்குத் திரும்பத் தருகிறவர் அவர் என்கிறது விவிலியம்.
“அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்”. (யோ வேல் 2:25) என்கிறது யோவேல் நூல்.
இழந்ததை இறைவன் மீண்டும் தருகிறார். இங்கே இழப்பு என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்ததல்ல. வெறும் செல்வம் சார்ந்ததல்ல. மனித வாழ்க்கையை ஒட்டு மொத்தமாய் குறிப்பிடுகிறது. பாவத்தின் கோரக் கரங்களில் சிக்கி நமது வாழ்க்கை அழிவுக்குள் செல்லும் போது, நம்மை மீட்டுக்கொண்டு மீண்டும் நல்வாழ் வைத் தருபவராக இறைவன் பரிமளி க்கிறார்.
“இறைவனிடத்தில் திரளான மீட்பு உண்டு” என விவிலியம் சொல்கிறது. அவரிடத்தில் திரளான செல்வம் உண்டு என சொல்லவில்லை. இறை வனுடைய சிந்தனை மனிதனுடைய மீட்பு என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இவ்வுலக வாழ்க்கை தற் காலிகமானது. அதன் கவலைகளில் அமிழ்ந்து விடாமல் மீட்பின் வழி களில் நாம் வரவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
நமது வெற்றிட வாழ்க்கையை, முழுமை யான வாழ்க்கையாய் மாற்ற இறைவனுடைய வார்த்தைகளால் முடியும். “அவருடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது” என்கிறது விவிலியம்.
எகிப்து நாட்டில் அடிமைகளாக உழன்ற எபிரேய மக்களை இறைவன் மீட்டுக் கொண்டு வருகிறார். விடுதலை நாயகனான மோசேக்கு இறைவனின் வார்த்தைகள் தான் வழிகாட்டின. அந்த விடுதலைப் பயணத்தில் மோசேயின் வலிமையாக இருந்தவை இறைவனின் வார்த்தை கள் தான்.
கடவுளுடைய ஆற்றல் இல்லாமை யிலிருந்து நிறைவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. கடவுளுடைய ஆற்றல் இழந்தவற்றை நமக்கு மீண்டும் திரும்பத் தருகிறது.
இறைவன் நமக்காக மிக உயரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் போது அந்தத் திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.
‘நான் ஒரு முறை லண்டன் செல்ல ஆசைப்படுகிறேன் என்பதற்கும், நான் அடுத்த வாரம் லண்டன் செல்கிறேன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவது கூறியது ஆசை, விருப்பம். இரண்டாவது கூறியது வகுக்கப்பட்ட திட்டம். திட்டவட்டமான முன்னேற்பாடு.
நம்முடைய வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது? வெறும் ஆசைகளின் அணிவகுப்பாக இருக்கிறதா? அல்லது தெளிவான திட்டங்களோடு பயணிக்கிறதா?
“இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்” (எசாயா 32:1) என்கிறது இறை வார்த்தை. இங்கே நேர்மையுடன் அரசாள்வார் என்பது திட்டவட்டமான முன்னேற்பாடு. அது விருப்பம் அல்ல, இறை திட்டம்.
“இறைவனை அன்பு கூர்பவராக, சேர்த்துக் கொள்பவராக, நம்மோடு இருப்பவராக...” (எபிரேயர் 12) பைபிள் சொல்கிறது. இறைவனின் மீது நம்பிக்கை வைப்போம். அதற்கு அவருடைய குணாதிசயங்களைப் புரிந்து கொள்வோம். அதற்காய் இறைவார்த்தையை ஆழமாய் நேசிப்போம்.
அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறை வனின் தன்மைகளை முழுமையாய் அறிந்து கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக் கை கள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.
இறைவன் எப்படிப்பட்டவர் என் பதை உணரவேண்டுமெனில் அவரது வார்த்தைகள் எப்படிப்பட்டவை என் பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவருடைய வாக்குறுதிகள் எப்படிப் பட்டவைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரது வார்த்தைகளையும், வாக்குறுதிகளை யும் தாங்கியிருக்கின்ற நூல் தான் விவிலியம். அந்த விவிலியத்தின் வார்த்தைகளை நாம் விளங்கிக் கொள் ளும் போது இறைவனை விளங்கிக் கொள்கிறோம்.
கடவுளுடைய வார்த்தைகள் மாறா தவை. அவருடைய வாக்குறு திகள் மாறாதவை. ஆனால் அவை நமது வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற் படுத்தக் கூடிய வலிமை படைத்தவை.
“அவரு சொன்னா சொன்னது தான்” என ஒருவரைப் பற்றி நாம் எப்போது சொல்வோம்? அந்த நபரு டைய குணாதிசயங்கள் எப்படிப் பட்டவை என்பதை அறியும் போது, இல்லையா?. அதே போல தான் இறை வனுடைய வார்த்தைகள் மாறாதவை என்பதைப் புரிந்து கொள்ள அவரு டைய குணாதிசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
“அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறு கின்றவர்” என இறைவனின் குணாதிசயங்களைப் பற்றி யோவேல் (2:13) நூல் விளக்கு கிறது. அது மட்டுமல்ல நமது வாழ்வில் நாம் இழந்து போனவற்றை மீண்டும் நமக்குத் திரும்பத் தருகிறவர் அவர் என்கிறது விவிலியம்.
“அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்”. (யோ வேல் 2:25) என்கிறது யோவேல் நூல்.
இழந்ததை இறைவன் மீண்டும் தருகிறார். இங்கே இழப்பு என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்ததல்ல. வெறும் செல்வம் சார்ந்ததல்ல. மனித வாழ்க்கையை ஒட்டு மொத்தமாய் குறிப்பிடுகிறது. பாவத்தின் கோரக் கரங்களில் சிக்கி நமது வாழ்க்கை அழிவுக்குள் செல்லும் போது, நம்மை மீட்டுக்கொண்டு மீண்டும் நல்வாழ் வைத் தருபவராக இறைவன் பரிமளி க்கிறார்.
“இறைவனிடத்தில் திரளான மீட்பு உண்டு” என விவிலியம் சொல்கிறது. அவரிடத்தில் திரளான செல்வம் உண்டு என சொல்லவில்லை. இறை வனுடைய சிந்தனை மனிதனுடைய மீட்பு என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இவ்வுலக வாழ்க்கை தற் காலிகமானது. அதன் கவலைகளில் அமிழ்ந்து விடாமல் மீட்பின் வழி களில் நாம் வரவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
நமது வெற்றிட வாழ்க்கையை, முழுமை யான வாழ்க்கையாய் மாற்ற இறைவனுடைய வார்த்தைகளால் முடியும். “அவருடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது” என்கிறது விவிலியம்.
எகிப்து நாட்டில் அடிமைகளாக உழன்ற எபிரேய மக்களை இறைவன் மீட்டுக் கொண்டு வருகிறார். விடுதலை நாயகனான மோசேக்கு இறைவனின் வார்த்தைகள் தான் வழிகாட்டின. அந்த விடுதலைப் பயணத்தில் மோசேயின் வலிமையாக இருந்தவை இறைவனின் வார்த்தை கள் தான்.
கடவுளுடைய ஆற்றல் இல்லாமை யிலிருந்து நிறைவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. கடவுளுடைய ஆற்றல் இழந்தவற்றை நமக்கு மீண்டும் திரும்பத் தருகிறது.
இறைவன் நமக்காக மிக உயரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் போது அந்தத் திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.
‘நான் ஒரு முறை லண்டன் செல்ல ஆசைப்படுகிறேன் என்பதற்கும், நான் அடுத்த வாரம் லண்டன் செல்கிறேன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவது கூறியது ஆசை, விருப்பம். இரண்டாவது கூறியது வகுக்கப்பட்ட திட்டம். திட்டவட்டமான முன்னேற்பாடு.
நம்முடைய வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது? வெறும் ஆசைகளின் அணிவகுப்பாக இருக்கிறதா? அல்லது தெளிவான திட்டங்களோடு பயணிக்கிறதா?
“இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்” (எசாயா 32:1) என்கிறது இறை வார்த்தை. இங்கே நேர்மையுடன் அரசாள்வார் என்பது திட்டவட்டமான முன்னேற்பாடு. அது விருப்பம் அல்ல, இறை திட்டம்.
“இறைவனை அன்பு கூர்பவராக, சேர்த்துக் கொள்பவராக, நம்மோடு இருப்பவராக...” (எபிரேயர் 12) பைபிள் சொல்கிறது. இறைவனின் மீது நம்பிக்கை வைப்போம். அதற்கு அவருடைய குணாதிசயங்களைப் புரிந்து கொள்வோம். அதற்காய் இறைவார்த்தையை ஆழமாய் நேசிப்போம்.
தன்னை தாழ்த்தி, நாவை அடக்கி பெருமைகளை விட்டு, வேதத்தை படித்து, அதை நேசித்து, அதன்படி ஜீவித்தால் கர்த்தர் என்றென்றைக்கும் துணை நிற்பார். ஆமென்.
‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். பெருமையையும் அகந்தையையும் தீய வழியையும் புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்’ (நீதி.8:13)
இயேசு கிறிஸ்துவில் பிரியமான வர்களே, தேவ ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கிற காரியங்களை நாம் வெறுத்தால்; இறைவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் வெறுத்தால், பரலோகத்தின் ஆசீர் வாதங்களும், பூமியின் ஆசீர்வாதங் களும் நிறைவாக கிடைத்துக் கொண்டே இருக்கும். மனிதனின் தீமையையும், பெருமையையும் தேவன் வெறுக்கிறார்.
இறைவனின் கண்கள் எவ்விடத்தி லுமிருந்து நல்லோரையும் தீயோரையும் பெருமைக்காரரையும் நோக்கி பார்க்கிறது. பணம், அழகு, படிப்பு, அந்தஸ்து இருந்தாலும் ஒன்றும் இல்லாதவனைப் போல் இருக்க வேண்டும். நான் உயர்ந்தவன், நான் பெரியவன், நான் சிறந்தவன் என்று யாரிடமும் பெருமை பேசாதே. ஒரு வருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத் தாழ்மையை அணிந்து கொள்வதுதான் தேவன் விரும்புவது.
ஏனெனில் ‘மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவிதத்தின் பெருமையும் உலகத்திலிருந்து உண்டா னது. பிதாவிடனிடத்திலிருந்து உண் டாகவில்லை’.
உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றென்றைக்கும் நிலைத்து இருப்பான். தன் இருதயத்தில் பெருமையாக பேசி நிர்விசாரத்தோடி ருக்கிற அநேகர் தேவமகிமையை காண்பதில்லை. பெருமையுள்ள வனைப் பார்க்கிலும் பொறுமையுள் ளவன் உத்தமன்.
‘பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையு ள்ளவர்களுக்கோ கிருபை அளிக் கிறார்’ (1 பேதுரு 5:5).
பெருமையுள்ளவர்களுக்கு தேவ கோப ஆக்கினை வருகிறது. பெரு மைக்காரர் அநேகர் விழுந்தார்கள். அவர்களால் எழுந்திருக்க முடியவி ல்லை.
‘நான் இச்சித்தத்தைப் பெற்றுக் கொண்டேன்’ என்று பெருமை பாராட்டி கேடான காரியம் வந்தது. கொள்ளை பொருளால் பெருமை பாராட்டி கொடுமையான தீங்கு வந்தது. எந்த காரியத்திலும் வீணாக பெருமை பாராட்டி வெட்கப்பட்டு போனார்கள்.
வேதத்தில் பலர் பெருமையை தேடி, பொல்லாப்பை பெற்றார்கள், தேவ கிருபையை இழந்து போனார்கள். மனுஷருடைய பெருமையை அடக்குகிறவர் அவரே.
தாழ்மையும், பொறுமையும் உடையவர்களுக்கு தேவ கிருபையை ஊற்று கிறார். அவன் நதி ஓரமாய் நடப்பட்ட மரத்தை போலிருக்கிறான். தன் காலத்தில் தன் கனியைத் தருவது போல் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவன் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பான். அவன் கை செய்யும் வேலையிலெல்லாம் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்.
தாழ்மை உள்ளவர்களை, நதியோரத்திலுள்ள தோட்டங்களை போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங் களைப் போலவும் உயர்த்துவார். பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் அவனை ஏறி வரப் பண்ணுவார். அவன் இருதயம் மகிழ்ச்சியும், அவன் முகம் பிரகாசமுமாக இருக்கும்.
‘அப்படியே நாவானதும் சிறிய அவ யமாயி ருந்தும் பெருமையானவை களைப் பேசும் பாருங்கள். சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை கொளுத்திவிடுகிறது’ (யாக்கோபு 3:5)
நாவின் பெருமை நெருப்பை போன்றது. நாவு அநீதி நிறைந்து அநேக பெருமைகளை பேசும். பெரு மையை பேசி முழு சரீரத்தையும் கறைப் படுத்தி விடும். நாவை அடக்க ஒரு மனுஷனாலும் முடியவில்லை. அது அடங்காத பொல்லாத பெருமைகளை பேசி பின்பு இருதயத்தில் வேதனை களை தரும்.
ஒரே நீர் ஊற்றிலிருந்து தித்திப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா? மாம ரம் பலா பழத்தையும், பலா மரம் மாம் பழத்தையும் கொடுக்குமா? ஒருபோதும் அப்படி ஆகிறதில்லை. ஆனால் நாவானது ஆண்டவருக்கு பிரியமான காரியத்தையும், பின்பு பிரியமில்லாத காரியத்தையும் பேசுகிறது.
பெருமைக்குரிய மகா பெரிய கப்பல்கள் சிறிதான சுக்கானாலே, நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு போகிறது. சிறிய நாவு பெருமையாக பேசி, பெரிய சரீரத்தை கறைப் படுத்துகிறது. குதிரைகளின் வாய்க ளில் கடிவாளம் போட்டு மனிதனுக்கு கீழ்ப்படிகிறது. குதிரைகளை அடக்கும் மனிதனின் நாவு தேவனுக்கு கீழ்ப் படியாமல் பெருமை பேசுகிறது.
கர்த்தர் சமுத்திரத்தை பார்த்து ‘இம் மட்டும் வா, மிஞ்சி வராதே. உன் அலை களின் பெருமை இங்கே அடங்கக் கடவது’ என்றார். சமுத்திரத்தின் அலை அடங்கியது. இயேசு சென்ற படகில் பலத்த சுழல்காற்று உண்டாகி அலைகள் அதின்மேல் மோதியபோது, ‘இரையாதே அமைதலாயிரு’ என்றார். காற்று நின்றுபோய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
தன்னை தாழ்த்தி, நாவை அடக்கி பெருமைகளை விட்டு, வேதத்தை படித்து, அதை நேசித்து, அதன்படி ஜீவித்தால் கர்த்தர் என்றென்றைக்கும் துணை நிற்பார். ஆமென்.
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் ஊ. பூமணி, சென்னை-50.
இயேசு கிறிஸ்துவில் பிரியமான வர்களே, தேவ ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கிற காரியங்களை நாம் வெறுத்தால்; இறைவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் வெறுத்தால், பரலோகத்தின் ஆசீர் வாதங்களும், பூமியின் ஆசீர்வாதங் களும் நிறைவாக கிடைத்துக் கொண்டே இருக்கும். மனிதனின் தீமையையும், பெருமையையும் தேவன் வெறுக்கிறார்.
இறைவனின் கண்கள் எவ்விடத்தி லுமிருந்து நல்லோரையும் தீயோரையும் பெருமைக்காரரையும் நோக்கி பார்க்கிறது. பணம், அழகு, படிப்பு, அந்தஸ்து இருந்தாலும் ஒன்றும் இல்லாதவனைப் போல் இருக்க வேண்டும். நான் உயர்ந்தவன், நான் பெரியவன், நான் சிறந்தவன் என்று யாரிடமும் பெருமை பேசாதே. ஒரு வருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத் தாழ்மையை அணிந்து கொள்வதுதான் தேவன் விரும்புவது.
ஏனெனில் ‘மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவிதத்தின் பெருமையும் உலகத்திலிருந்து உண்டா னது. பிதாவிடனிடத்திலிருந்து உண் டாகவில்லை’.
உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றென்றைக்கும் நிலைத்து இருப்பான். தன் இருதயத்தில் பெருமையாக பேசி நிர்விசாரத்தோடி ருக்கிற அநேகர் தேவமகிமையை காண்பதில்லை. பெருமையுள்ள வனைப் பார்க்கிலும் பொறுமையுள் ளவன் உத்தமன்.
‘பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையு ள்ளவர்களுக்கோ கிருபை அளிக் கிறார்’ (1 பேதுரு 5:5).
பெருமையுள்ளவர்களுக்கு தேவ கோப ஆக்கினை வருகிறது. பெரு மைக்காரர் அநேகர் விழுந்தார்கள். அவர்களால் எழுந்திருக்க முடியவி ல்லை.
‘நான் இச்சித்தத்தைப் பெற்றுக் கொண்டேன்’ என்று பெருமை பாராட்டி கேடான காரியம் வந்தது. கொள்ளை பொருளால் பெருமை பாராட்டி கொடுமையான தீங்கு வந்தது. எந்த காரியத்திலும் வீணாக பெருமை பாராட்டி வெட்கப்பட்டு போனார்கள்.
வேதத்தில் பலர் பெருமையை தேடி, பொல்லாப்பை பெற்றார்கள், தேவ கிருபையை இழந்து போனார்கள். மனுஷருடைய பெருமையை அடக்குகிறவர் அவரே.
தாழ்மையும், பொறுமையும் உடையவர்களுக்கு தேவ கிருபையை ஊற்று கிறார். அவன் நதி ஓரமாய் நடப்பட்ட மரத்தை போலிருக்கிறான். தன் காலத்தில் தன் கனியைத் தருவது போல் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவன் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பான். அவன் கை செய்யும் வேலையிலெல்லாம் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்.
தாழ்மை உள்ளவர்களை, நதியோரத்திலுள்ள தோட்டங்களை போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங் களைப் போலவும் உயர்த்துவார். பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் அவனை ஏறி வரப் பண்ணுவார். அவன் இருதயம் மகிழ்ச்சியும், அவன் முகம் பிரகாசமுமாக இருக்கும்.
‘அப்படியே நாவானதும் சிறிய அவ யமாயி ருந்தும் பெருமையானவை களைப் பேசும் பாருங்கள். சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை கொளுத்திவிடுகிறது’ (யாக்கோபு 3:5)
நாவின் பெருமை நெருப்பை போன்றது. நாவு அநீதி நிறைந்து அநேக பெருமைகளை பேசும். பெரு மையை பேசி முழு சரீரத்தையும் கறைப் படுத்தி விடும். நாவை அடக்க ஒரு மனுஷனாலும் முடியவில்லை. அது அடங்காத பொல்லாத பெருமைகளை பேசி பின்பு இருதயத்தில் வேதனை களை தரும்.
ஒரே நீர் ஊற்றிலிருந்து தித்திப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா? மாம ரம் பலா பழத்தையும், பலா மரம் மாம் பழத்தையும் கொடுக்குமா? ஒருபோதும் அப்படி ஆகிறதில்லை. ஆனால் நாவானது ஆண்டவருக்கு பிரியமான காரியத்தையும், பின்பு பிரியமில்லாத காரியத்தையும் பேசுகிறது.
பெருமைக்குரிய மகா பெரிய கப்பல்கள் சிறிதான சுக்கானாலே, நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு போகிறது. சிறிய நாவு பெருமையாக பேசி, பெரிய சரீரத்தை கறைப் படுத்துகிறது. குதிரைகளின் வாய்க ளில் கடிவாளம் போட்டு மனிதனுக்கு கீழ்ப்படிகிறது. குதிரைகளை அடக்கும் மனிதனின் நாவு தேவனுக்கு கீழ்ப் படியாமல் பெருமை பேசுகிறது.
கர்த்தர் சமுத்திரத்தை பார்த்து ‘இம் மட்டும் வா, மிஞ்சி வராதே. உன் அலை களின் பெருமை இங்கே அடங்கக் கடவது’ என்றார். சமுத்திரத்தின் அலை அடங்கியது. இயேசு சென்ற படகில் பலத்த சுழல்காற்று உண்டாகி அலைகள் அதின்மேல் மோதியபோது, ‘இரையாதே அமைதலாயிரு’ என்றார். காற்று நின்றுபோய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
தன்னை தாழ்த்தி, நாவை அடக்கி பெருமைகளை விட்டு, வேதத்தை படித்து, அதை நேசித்து, அதன்படி ஜீவித்தால் கர்த்தர் என்றென்றைக்கும் துணை நிற்பார். ஆமென்.
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் ஊ. பூமணி, சென்னை-50.






